மன் கி பாத் நிகழ்ச்சியில் ஹரியானாவை சேர்ந்த மாணவனுக்கு சுவாரஸ்ய பதில் அளித்த பிரதமர் மோடி

மன் கி பாத் நிகழ்ச்சியில் ஹரியானாவை சேர்ந்த மாணவனுக்கு சுவாரஸ்ய பதில் அளித்த பிரதமர் மோடி

Update: 2019-11-25 05:35 GMT

பிரதமர் மோடியின் மன்கிபாத் நிகழ்ச்சி அகில இந்திய ரேடியோவில் ஒலிபரப்பானது இன்று காலை 11 மணியளவில் 59-வது மன்கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றினார், பிரதமர் நரேந்திர மோடி மன் கீ பாத் நிகழ்ச்சியில் பேசியபோது, அரியானா சேர்ந்த மாணவர் ஒருவர்,  உங்களது இடைவிடாத பணிச்சுமையும் உங்களுக்கு தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்கள் பார்க்கவும், புத்தகம் வாசிக்கவும் நேரம் உள்ளதா என்று கேள்விக்கு எழுப்பினார்.


இதற்கு பதில் அளித்த பிரதமர், தொலைக்காட்சி பார்ப்பதை நான் பழக்கமாக கொண்டிருக்கவில்லை என அவர் கூறினார்.புத்தகம் வாசிப்பது தமக்கு மிகவும் பிடித்தமானது என்றார். அதேநேரத்தில் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பதில்லை , அண்மை காலமாக புத்தகம் அதிகம் வாசிப்பதில்லை என்ற அவர், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையே கூகுள் இணையதளம் பாழாக்கி விட்டதாகவும் நகைச்சுவையுடன் சிரித்துக்கொண்டே  கூறினார்.


Similar News