மோடிஜி அறிவிப்பு சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்துடன் தொடர்பு படுத்தி வைரலானது.. எப்படியோ நல்லது நடந்தால் சரி..

மோடிஜி அறிவிப்பு சிவகார்த்திகேயன் வேலைக்காரன் படத்துடன் தொடர்பு படுத்தி வைரலானது.. எப்படியோ நல்லது நடந்தால் சரி..

Update: 2020-04-03 10:29 GMT

கொரோனா வைரஸ் நேரத்தில், பிரதமர் மோடி இன்று ஒரு வேண்டுகோளை விடுத்தார். வரும் ஏப்ரல் 5 ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்குகளை அணைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்கு உள்ளிட்டவற்றை ஏற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

அவ்வளவுதான்  சாமி  சும்மா இருப்பார்களா..?  நம்ம தமிழ் நாட்டு ஆட்கள். உடனே இது வேலைக்காரன் பட க்ளைமாக்ஸ் போலவே இருக்கிறதே என ஆரம்பித்துவிட்டார்கள்.

சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் க்ளைமாக்ஸிலும் அனைவரும் இப்படி டார்ச் அடித்து ஆதரவை தெரிவிப்பார்கள்.

இதையடுத்து பிரதமர் மோடியின் ஐடியாக்களை போலவே தமிழ் சினிமாவில் இருக்கும் காட்சிகளை ஒப்பிட்டு இணையத்தை ஜாலி செய்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த கொரோனா வைரஸ் அச்சம் என்பது அனைவருக்கும் ஒரு கடினமான காலம்தான். அதற்காக பல்வேறு தரப்பினரும் அயராது உழைக்கின்றனர்.

எப்படியோ நல்லது நடந்தால் சரி நாட்டு மக்கள் பாதுகாப்பு மட்டுமே எனது முதன்மை நோக்கமாக இருக்கும் என பாரத பிரதமர் மோடி கூறியது நினைவுக்கு வரும்.

அதே நேரத்தில் இது போன்ற கடினமான சூழலை கொஞ்சம் லேசாக்கும் வகையில் நமது நெட்டிசன்களின் இது போன்ற ஜாலி பதிவுகள் அனைவரையும் ரசிக்க வைக்கிறது.

ஆக மொத்தத்தில்

பிரதமர் மோடிக்கு தமிழ் சினிமாவின் தாக்கம் இருக்கிறதோ இல்லையோ, நம்மை கொரோனா வைரஸ் தாக்காமல் இருந்தால் சரிதான். அதற்கான பாதுகாப்போடு இருப்போம் மக்களே.!

Similar News