மோடியின் உத்தரவாதம் எல்லைகளைக் கடந்தும் வேலை செய்கிறது- மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்!

மோடியின் உத்தரவாதம் எல்லைகளை கடந்தும் வேலை செய்கிறது என்றும் எந்த நாட்டில் இருந்தாலும் மோடி மீது நம் இந்திய மக்களுக்கு நம்பிக்கை உண்டு என்றும் கூறியுள்ளார்.

Update: 2024-04-11 14:12 GMT

ராஜஸ்தானின் பிகானீர் நகரில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார் .அப்போது அவர் பேசும்போது மத்திய வெளி விவகாரத்துறை மந்திரி ஆக எனக்கு தெரிந்தவரையில் நம்முடைய குடிமக்கள் அல்லது நம்முடைய நாட்டினர் எந்த பகுதியில் ஆவது சிக்கிக்கொண்டால் மோடியின் உத்தரவாதம் நம்முடைய எல்லைகளை கடந்தும் வேலை செய்கிறது என என்னால் உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார்.

வெளிநாட்டுக்கு வேலைக்காக அல்லது சுற்றுலா வாசிகளாக அல்லது படிப்புக்காக செல்லும் மாணவர்களாக என நம்முடைய மக்களுக்கு பிரதமர் மோடியின் இந்தியா மீது இப்போது உள்ளது போல் எப்போதும் அவர்களுக்கு துணை நிற்போம் என்ற முழு நம்பிக்கை உள்ளது .எந்த இடத்திலாவது ஏதேனும் சிக்கல் தோன்றினால் நாங்கள் அந்த பகுதியில் இருப்போம் என்று கூறினார். இதேபோன்று உக்கரைன் இஸ்ரேல் அல்லது சூடான் நாடுகளில் சவாலான சூழலை எதிர்கொண்ட போது மக்களுக்கு இந்திய அரசு ஆதரவு அளித்தது நம்பகத்தன்மையுடன் செயல்பட்டது என உறுதியுடன் கூறினார்.


SOURCE :Dinaseithi

Similar News