பிரம்மாண்டமாக தொடங்கிய காசி தமிழ் சங்கம் வரவேற்பு.. பாரம்பரிய பெருமைகளை கட்டி எழுப்பும் மாநாடு..

Update: 2023-12-18 01:54 GMT

காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல் தொகுப்பு தமிழகக் குழு காசி சென்றடைந்தது. புனித நதியான 'கங்கை'யின் பெயரிடப்பட்ட மாணவர்களைக் கொண்ட குழு வந்திறங்கியதும் குழுவினருக்குப் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. காசி தமிழ் சங்கமத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வை வாரணாசியில் உள்ள நமோ படித்துறையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். அதன்படி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்த யாத்திரை பயணத்தில் கலந்து கொண்ட தமிழ் மக்களை சிறப்பாக வரவேற்றுகிறார். புனித நதியான 'கங்கை'யின் பெயரிடப்பட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அடங்கிய தமிழ் தூதுக்குழுவின் முதல் குழு இன்று புனித நகரமான காசியை அடைந்தது.

ஆசிரியர்கள் (யமுனா), தொழில் வல்லுநர்கள் (கோதாவரி), ஆன்மீகம் (சரஸ்வதி), விவசாயிகள் மற்றும் கைவினைஞர்கள் (நர்மதா), எழுத்தாளர்கள் (சிந்து) வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் (காவேரி) ஆகியோரைக் கொண்ட மேலும் ஆறு குழுக்கள் சங்கமத்தில் பங்கேற்க காசிக்கு வரவுள்ளன. கலாச்சாரம், சுற்றுலா, ரயில்வே, ஜவுளி, உணவு பதப்படுத்துதல், எம்.எஸ்.எம்.இ, தகவல் மற்றும் ஒலிபரப்பு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர், ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் உத்தரபிரதேச அரசின் தொடர்புடைய துறைகளின் பங்கேற்புடன் மத்திய அரசின் கல்வி அமைச்சகம் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பு முகமையாக உள்ளது.

பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கியமான கல்வி மற்றும் கலாச்சார மையங்களான காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான வாழும் பிணைப்புகளை புதுப்பிப்பதே இந்த மக்களுக்கு இடையிலான இணைப்பு திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த இரண்டு பாரம்பரிய அறிவு மற்றும் கலாச்சாரத்தை ஒன்றிணைப்பதையும், பகிரப்பட்ட பாரம்பரியம் குறித்த புரிதலை உருவாக்குவதையும், இந்த இரண்டு பிராந்தியங்களின் மக்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இரண்டு கலாச்சாரங்களுக்கும் இடையிலான பண்டைய அறிவுசார், கலாச்சார, ஆன்மீக மற்றும் கைவினை இணைப்பை மீண்டும் கண்டுபிடித்து வலுப்படுத்தும் நோக்கத்தையும் இந்த விழா கொண்டுள்ளது. 15 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தமிழகம் மற்றும் வாரணாசியைச் சேர்ந்த பல்வேறு கலைக்குழுவினர் காசியில் கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் மட்டுமின்றி, காசியில் வசிப்பவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News