புதிய அறிவிப்பு வெளியிட்ட மத்திய ரயில்வே அமைச்சகம்! மயிலாடுதுறை மக்களுக்காக டெல்லி வரை சென்ற கருப்பு முருகானந்தம்!

Update: 2024-03-08 10:04 GMT

நீண்ட நாட்களாக மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த மக்கள் மயிலாடுதுறை - மைசூர் விரைவு ரயிலை கடலூர் வரை நீட்டிக்க வேண்டும் என்றும் மயிலாடுதுறை செங்கோட்டை எக்ஸ்பிரஸ் வடமதுரையில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து வந்தனர். இதை அடுத்து தமிழக பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் மக்களின் கோரிக்கைகளை தமிழக பாஜக சார்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் முன்வைத்துள்ளார். 

அவர்களின் கோரிக்கைகளை ஏற்ற மத்திய ரயில்வே துறை அமைச்சர் மயிலாடுதுறை - மைசூர் இடையேயான விரைவு ரயில் கடலூர் வரை நீட்டிக்கும் படியும் மயிலாடுதுறை செங்கோட்டை எக்ஸ்பிரஸ் வடமதுரையில் நிறுத்துவதற்கான ஒப்புதலையும் அளித்துள்ளார். இந்த செய்தி மயிலாடுதுறை மாவட்ட மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மேலும் இதுகுறித்து பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு மத்திய ரயில்வே துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்திருந்தார். 



மேலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், எங்கள் கோரிக்கையை பரிசீலித்து, மயிலாடுதுறை மைசூரு விரைவு ரயிலை கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்ததற்காக மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.மயிலாடுதுறை செங்கோட்டை எக்ஸ்பிரஸ் வடமதுரையில் நிறுத்தப்படுவதற்கு ஒப்புதல் அளித்த மாண்புமிகு ரயில்வே அமைச்சருக்கும் நன்றி. ரயில்வே அமைச்சகத்தின் இந்த கவனமான முடிவுகளால் இந்தப் பகுதியில் அடிக்கடி பயணிப்பவர்கள் பெரிதும் பயனடைவார்கள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 




 


 


Similar News