லோக் சபா தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தமிழக பாஜக!

Update: 2024-03-22 09:54 GMT

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியானதிலிருந்து தமிழக அரசியல் கட்சி பரபரப்பாக தேர்தல் வேலைகளை மேற்கொண்டு வந்தது. 

அந்த வகையில் தற்போது வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து தனது கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கிடையும் முடிவு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தமிழக பாஜக தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. மேலும் தமிழகத்தில் 19 தொகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்கள் நான்கு பேர் தாமரை சின்னத்திலும் போட்டியிட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி இருந்தது. அதோடு கோவையில் மாநில தலைவர் அண்ணாமலையும் தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜனும் போட்டியிட உள்ளனர். 

இந்த நிலையில், தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது அதில், திருப்பூரில் ஏ.பி. முருகானந்தம், மதுரையில் ராம சீனிவாசன் மற்றும் விருதுநகரில் ராதிகா சரத்குமார் என முக்கிய வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. 

Source : Dinamalar 

Similar News