மூத்த அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கும் பாஜக தேர்தல் அறிக்கை குழு..! வெளியான தகவல்!.

Update: 2024-03-30 12:53 GMT

ஏழு கட்டங்களாக 2024 லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது இதனால் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி, பிரச்சாரம், வேட்பு மனு தாக்கல் என அனைத்து கட்சிகளும் மும்முரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு கட்சியும் தனது தேர்தல் அறிக்கையை தயார் செய்வதிலும் மும்முரம் காட்டி வருகிறது, அதிலும் சில கட்சிகள் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்டது! 

அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சி தனது தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் குழுவை நியமித்துள்ளது, அதன்படி இந்தக் குழு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைக்கப்பட்டு உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மேலும் இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இணை ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலும் இடம்பெற்றுள்ளனர். 

மேலும், பூபேந்திர யாதவ், அஸ்வினி வைஷ்ணவ், ஸ்மிருதி இரானி, பூபேந்திர படேல், சிவராஜ் சிங் சவுகான் என கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்களான 27 பேர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். 

Source : Dinamalar 

Similar News