இதுதான் திராவிட மாடல் ஆட்சி! மக்களுக்கு வேதனை வழங்குவதில் சாதனை படைத்து வரும் திமுக! ஜி.கே. வாசன் பிரச்சாரம்!

Update: 2024-04-02 13:53 GMT

தமிழகத்தில் ஒரே கட்டமாக 40 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தென்காசி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜான்பாண்டியனை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

அப்பொழுது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இப்பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணங்களையும் பிரதிபலிக்கும் வேட்பாளர் தேவையாக இருந்து வந்தது. அந்த நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தென்காசி தொகுதியில் தாமரை சின்னத்தில் ஜான் பாண்டியனை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். 

கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர் முறையாக தனது பணியை செய்திருந்தால் தற்போது தென்காசி தொகுதியில் குவிந்து கிடக்கும் பிரச்சனையில் 60 சதவிகிதம் தீர்க்கப்பட்டு இருக்கும்! திமுக அரசு மக்களின் விரோத அரசாக செயல்படுகிறது பொய்களை மட்டும் கூறி மக்களை ஏமாற்றுகிறது! அதோடு மகளிருக்கான ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை சிலருக்கு மட்டும் வழங்கிவிட்டு காலையில் மகளிருக்கு அரசு வழங்கும் பணம் இரவு டாஸ்மாக் மூலம் அவர்களது கஜானாவிற்கே திரும்பி விடுகிறது, இதுதான் திராவிட மாடல் ஆட்சி! 

மத்திய அரசு நம் மக்களுக்கு வேண்டிய பல திட்டங்களை கொடுத்து சாதனை படைத்திருக்கிறது என்றால் திமுக அரசு மக்களுக்கு வேதனை வழங்குவதில் சாதனை படைத்து கொண்டு இருக்கிறது என்று பேசி உள்ளார். 

Source : The Hindu Tamil thisai 

Similar News