தமிழக முதல்வரால் ரோட் ஷோவை நடத்த முடியுமா? வரச் சொல்லுங்கள்! அண்ணாமலை சவால்!

Update: 2024-04-03 13:21 GMT

கோவை மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் மாநிலத் தலைவரும் கோவை வேட்பாளருமான அண்ணாமலை இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பொழுது,  தமிழகத்திற்குள் முதல்வர் ஸ்டாலின் அவ்வப்போது எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார் துபாய், ஸ்பெயின் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்று கொண்டிருக்கும் முதல்வர் தமிழ்நாட்டிற்கு உபயோகமாக ஒரு பணத்தையாவது கொண்டு வந்தாரா! இல்லை! இப்படி முதல்வர் களத்திற்கே வராத காரணத்தினால் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் கொள்ளை அடிப்பதை முழு வேலையாக செய்ய ஆரம்பித்தனர். 

முதல்வர் வீதிக்கு வந்தால்தான் மக்கள் அவர்கள் மீது கொண்ட அதிருப்தி அவருக்கு தெரியவரும் அதை விட்டுவிட்டு கேரவேனிலேயே இருந்தால் எப்படி தெரியும்! வீதி வீதியாக முதல்வர் வரவேண்டும் அவரை ரோட் சோவிற்கு வர சொல்லுங்கள் ஏதாவது ஒரு நகரத்தை தமிழகத்தில் தேர்ந்தெடுத்து பத்து கிலோமீட்டர் வரை அவர் வரட்டும் பிரதமர் அவர்கள் கோவையில் ரோட் சோவை செய்தார் இன்னும் அடுத்து ஒரு முக்கிய பகுதியில் செய்ய உள்ளார், முதல்வரும் செய்யட்டுமே எத்தனை பேர் முதல்வரை காண வருகிறார்கள் என்பதை பார்க்கிறேன் என்று அண்ணாமலை சவால் விடுத்து பேசி உள்ளார்..

Source : The Hindu Tamil thisai 

Similar News