காந்திநகர் தொகுதியில் போட்டியிடும் அமித்ஷா ...இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்..

Update: 2024-04-19 12:51 GMT

நாடு முழுவதும் லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக இன்று தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகிற நிலையில் மூன்றாவது கட்டத் தேர்தலில் குஜராத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளுக்கும் வருகின்ற மே 7ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்திநகர் பகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அப்பொழுது அவருடன் குஜராத் முதல்வர் பூபேந்திர பட்டேலும் இருந்தார். இதே தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் சோனல் படேல் களமிறங்கப்பட்டுள்ளார். 

முன்னதாக கடந்த லோக்சபா தேர்தலில் இதே தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Source : Dinamalar 

Similar News