வேட்புமனுவை வாபஸ் பெற்று பாஜகவில் இணைந்த காங்கிரஸ் வேட்பாளர்.....!

Update: 2024-04-29 15:57 GMT

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள 29 தொகுதிகளுக்கான லோக்சபா தேர்தல் முதல் கட்டமாக நடைபெற்றது. மேலும் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மே 7 மற்றும் 13ஆம் தேதி மூன்று மற்றும் நான்காம் கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது. 

இதில் மே 13ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்து தொகுதியில் லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு பதிவுகள் நடைபெற உள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அக்ஷய் காண்டி பம் இந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். 

ஆனால் திடீரென அக்ஷய் தனது வேட்பு மனுவை திரும்ப பெற்றதோடு பாஜகவில் இணைந்துள்ளார். முன்னதாக இந்தூர் தொகுதியில் தற்போதைய எம்.பி. சங்கர் லால்வாணி பாஜக சார்பில் போட்டியிடுகிறார்,

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அக்ஷய் தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் இந்தூர் தொகுதியில் பாஜகவின் வெற்றியானது உறுதியாகி உள்ளது. 

Source : Dinamalar 

Similar News