என்.ஐ.ஏ அதிரடி சோதனை..! தமிழகத்தில் அதிகமாகும் பயங்கரவாத அமைப்பினர் நடமாட்டம்!

Update: 2024-07-01 17:17 GMT

தமிழ்நாட்டில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனையில் மொபைல் போன்கள், லேப்டாப்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஹிஸ்புத் தஹ்ரீர், கிலாஃபா, இஸ்லாமிய அரசு மற்றும் அதன் நிதி அமைப்புகளின் சித்தாந்தத்தை கோடிட்டு காட்டும் புத்தகங்கள் மற்றும் அச்சு பிரதிகள் போன்ற பல ஆவணங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

அதாவது தமிழகத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கைகள் நடந்ததாக என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனையை என்.ஐ.ஏ மேற்கொண்டது. அதன்படியே என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனையில் பல ஆவணங்கள் சிக்கி உள்ளது. இதனை அடுத்து ஹிஸ்புத் தஹ்ரிர் வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் என்ற அப்துல் ரஹ்மான் மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகிய இரு நபர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தது. 

ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் என்பது ஒரு சர்வதேச பான்-இஸ்லாமிய மற்றும் அடிப்படைவாதக் குழுவாகும், இது இஸ்லாமிய கலிபாவை மீண்டும் நிறுவுவதற்கும், குழுவின் நிறுவனர் தகி அல்-தின் அல்-நபானியால் எழுதப்பட்ட அரசியலமைப்பை அமல்படுத்தவும் உறுதி கொண்டுள்ளது. மேலும் இவர்கள் இளைஞர்களை தீவிரவாதிகளாக ஆக்குவதற்கும், தீவிரவாத சித்தாந்தங்களை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறையை இஸ்லாத்திற்கு எதிரானதாக சித்தரிப்பதற்கும் ரகசிய வகுப்புகளை நடத்தியது என்.ஐ.ஏவின் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

அதுமட்டுமின்றி, ஈரோட்டில் இரண்டு வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியதில் பெரியார் நகர் கருப்பணசாமி தெருவில், மெக்கானிக் முகமது இசாக் என்பவரது வீட்டில், கொச்சியில் இருந்து வந்த குழுவினர், மொபைல் போன் மற்றும் இரண்டு பென் டிரைவ்களை பறிமுதல் செய்தனர். இதற்கிடையில், பூந்துறை அருகே உள்ள அசோக் நகரில், சென்னையைச் சேர்ந்த அதிகாரிகள், புகைப்படக் கலைஞர் ஷர்புதீன் என்பவரின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளது. அதோடு சென்னையைச் சேர்ந்த ஷர்புதீன் ஜூலை ஏழாம் தேதி சென்னையில் உள்ள தேசிய புலனாய்வு முகவை அலுவலகத்தில் ஆஜராகும் படியும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இப்படி தமிழகத்தில் திமுக ஆட்சியில் கோவை குண்டு வெடிப்பு, தமிழக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு என தொடர்ச்சியாக சட்டவிரோத செயல்கள் அரங்கேறி வருவதால், தற்போது ரெய்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் தமிழகத்தில் இன்னும் பல சோதனைகளை தேசிய புலனாய்வு முகமை மேற்கொள்ளலாம் எனவும், ஏற்கனவே தமிழகத்தில் நடந்துள்ள சில சம்பவங்களால் தமிழகத்தில் சில அமைப்புகளின் நடமாட்டத்தையும், தேசிய புலனாய்வு முகமை கண்காணித்து வருவதாகவும் அரசியல் வட்டாரம் முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. 

Source : The Commune 

Tags:    

Similar News