பத்திர கட்டணம் உயர்வு,மாநகராட்சி வரி உயர்வு, மின் கட்டணம் உயர்வு: 'திமுகவே உந்தன் மறுபெயர் தான் கட்டண உயர்வா?' மக்களை வாழ விடுமா திமுக?

திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மின் கட்டணம், பத்திர கட்டணம், மாநகராட்சி வரி உயர்ந்திருப்பதாகவும் பொதுமக்கள் அதனால் பல வகையில் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மின்வெட்டும் அதிகரித்திருப்பதாகவும் இணையத்தில் நெட்டிசன்கள் விலாசித் தள்ளி வருகிறார்கள்.

Update: 2024-07-16 18:06 GMT

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNERC) அனைத்து நுகர்வோருக்கும் 4.83% மின் கட்டண உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலை 1 முதல் மின்கட்ட உயர்வு அமலுக்கு வந்தது. பொது மக்கள் இந்த கட்டண உயர்வை பெருமளவில் எதிர்த்தனர். ஏற்கனவே முந்தைய கட்டணஉயர்வுகள் மக்களுக்கு சுமையாக இருந்தது. தமிழ்நாடு உற்பத்தி மற்றும் விநியோகக் கழகம் லிமிடெட் (TANGEDCO) தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் புதிய கட்டண மாற்றங்களை தெளிவுபடுத்த ஒரு விளக்கத்தை வெளியிட்டது. இது இணையவாசிகளிடமிருந்து பரவலான விமர்சனங்களைத் தூண்டியது. அவர்கள் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மின் கட்டணங்களைக் குறைப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும், அதற்குப் பதிலாக அவற்றை பல முறை உயர்த்தியதாகவும் திமுக அரசாங்கத்தை குற்றம் சாட்டினர்.

மின்கட்டண உயர்வு இப்போது வெவ்வேறு பயன்பாட்டு அடுக்குகளில் யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை அதிகரிக்கின்றன. உதாரணமாக, குறைந்த ஸ்லாப்பில் (மாதத்திற்கு இருமுறை 400 யூனிட்கள் வரை) யூனிட் விலை ரூ.4.60ல் இருந்து ரூ 4.80 ஆகவும், 401-500 யூனிட்களுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.45 ஆகவும் அதிகரிக்கிறது. அதேபோல், 501-600 யூனிட்களுக்கு ரூ.8.15ல் இருந்து ரூ.8.55 ஆகவும், 601-800 யூனிட்களுக்கு ரூ9.20ல் இருந்து ரூ.9.65 ஆகவும் உயர்கிறது. 801-1000 யூனிட்களுக்கான கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ10.20ல் இருந்து ரூ10.70 ஆகவும், 1,000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் யூனிட்டுக்கு ரூ.11.25ல் இருந்து ரூ11.80 ஆகவும் அதிகரிக்கிறது.

மாதத்திற்கு இருமுறை 500 யூனிட்களைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, முந்தைய கட்டணமான ரூ.2,455 உடன் ஒப்பிடும்போது, ​​புதிய கட்டணங்கள் ரூ.2,565 ஆக இருக்கும். கட்டண வகை 1E இன் கீழ் பல அடுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் பொதுவான வசதிகள் (லிஃப்ட் இல்லாத மூன்று தளங்களுக்கு மேல் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள்) ஒரு யூனிட் கட்டணம் ரூ.8.15 லிருந்து ரூ.8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் நிலையான கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு மாதத்திற்கு ரூ.102லிருந்து. ரூ107 ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக பொது விளக்குகள், நீர் வழங்கல், கழிவுநீர், வழிபாட்டுத் தலங்கள், குடிசை மற்றும் குறுந்தொழில்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் மற்றும் தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவைகள் போன்ற பிற வகைகளுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. நகராட்சி வரியும் உயர்த்தப்பட்டுள்ளது. பத்திரப்பதிவு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து எல்லாவற்றிலும் கட்டண உயர்வு மட்டுமே மக்கள் கண்ட பலனாக உள்ளது .இவ்வாறு மின்கட்டணம் அதிகரிப்பதனால் பல்வேறு சிறு குறு தொழில்கள் பாதிக்கப்படுகின்றன.

ஈரோடு, திருப்பூர், கோயமுத்தூர் போன்ற நகரங்களில் உள்ள தொழிற்சாலைகள் பெருமளவில் பாதிக்கப்படும் .இதனால் விலைவாசி உயர்வு அதிகரிக்கும். நடுத்தர மக்களும் ஏழை மக்களும் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மின் கட்டணம் குறிக்கப்படுவதால் நிச்சயமாக மின் கட்டண உயர்வுக்கு பின்னர் அனைத்து இடங்களிலும், இல்லங்களிலும் மின்கட்டணம் மிக அளவுக்கு அதிகமாகவே வரும் என்பதில் சந்தேகம் இல்லை .திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம் ஒருமுறை மின்கட்டன அளவீடு குறிக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளில் தந்திருந்தது. ஆனால் இதுவரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை .

மாதம் ஒரு முறை மின்கட்டணம் குறித்தால் மக்களுக்கு நிச்சயமாக அது பயனுள்ளதாக இருக்கும் மின் கட்டணமும் குறைவாக வரும். 100 யூனிட் இலவசம் மின்சாரத்தை இரண்டு மாதத்திற்கு பயன்படுத்தும் போது விரைவிலேயே மக்கள் அதனை பயன்படுத்தி விடுவார்கள். அதனால் அவர்களுக்கு நிச்சயமாக மின்கட்டணம் அதிக அளவில் வர வாய்ப்புள்ளது. இதுவே மாதத்திற்கு ஒருமுறை மின்கட்டணம் குறிக்கப்பட்டால் 100 யூனிட் இலவசம் மின்சாரத்தால் பயன் அதிகமாக இருக்கும்.மின் கட்டணம் குறைவாகவே வரும். ஆட்சிக்கு வருவதற்காக திமுக தேர்தல் சமயத்தின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் அந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டு விடுகிறது. இவை எல்லாவற்றிற்கும் ஆன தீர்வையும் திமுக அரசு தான் சொல்ல வேண்டும்.


SOURCE :Communemag.com

Tags:    

Similar News