பண வீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றி பெறும் - அடித்துச்சொல்லும் நிர்மலா சீதாராமன்

பண வீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் இந்தியா வெற்றி பெறும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நம்பிக்கை தெரிவித்தார் தெரிவித்தார்.

Update: 2022-12-01 05:45 GMT

சர்வதேச தலைவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தலைமை செயல் அதிகாரிகள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கான உலகளாவிய மன்றமான ராய்ட்டர்ஸ் நெக்ஸ்ட் நிகழ்ச்சியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று காணொளி மூலம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் நாட்டின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்னிறுத்தி பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது பணவீக்கத்தை சிறப்பாக கையாளுவதில் நாம் வெற்றியடைவோம். ஏனெனில் உணவு பொருள்களின் விலைகள் மீதான விநியோக பக்க அழுத்தங்களை நிவர்த்தி செய்ய ஒரு மிக நல்ல கட்டமைப்பு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ரிசர்வ் வங்கியின் மதிப்பு அறிக்கை தெளிவாக உள்ளது. அதாவது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இது நிகழ்வு தன்மை பிரிவுக்குள் நன்றாக இருக்கும். நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் ஜனவரி முதல் ரிசர்வ் வங்கியின் ஆறுதல் அளவான ஆறு சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. பணவீக்கம் வெளிப்புற காரணிகளால் பாதிக்கப்பட போகிறது .ஆனால் இந்தியாவுக்குள் விவசாய பொருட்கள் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் நாம் வசதியான நிலையில் இருக்கிறோம்.


நல்ல வேகமாக வளரும் இந்திய பொருளாதாரத்தை அடுத்த ஆண்டும் எதிர்பார்க்கிறேன். கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரை நாட்டின் நலன் சார்ந்த தனது நிலைப்பாட்டை இந்தியா கடந்த பிப்ரவரி மாதம் வெளிப்படுத்தி உள்ளது. எனக்கு மலிவு விலைகள் இருக்க வேண்டும். நிலையான விலைகளை கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உலகளாவிய பொது பொருள்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். சரக்குகளின் இயக்கம் கட்டுப்படுத்தப்பட்டால் அது நம்மில் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். பல நாடுகளைப் போலவே ரஷ்யாவில் இருந்தும் இந்தியாவிற்கு இறக்குமதிகள் அதிகரித்து வருகின்றன. ஏனெனில் ரஷ்யாவில் இருந்து வாங்குவதற்கு விலை காரணி, சாதகமாக உள்ளது. இதில் இந்தியா தனிமைப்படுத்தப்படவில்லை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.





 



Similar News