ஐ.டி ஊழியர்களிடையே உரையாடிய பிரதமர் : சென்னை காக்னிசென்ட் ஊழியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார் பிரதமர் மோடி
ஐ.டி ஊழியர்களிடையே உரையாடிய பிரதமர் : சென்னை காக்னிசென்ட் ஊழியர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார் பிரதமர் மோடி
புதுதில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற “ நான் அல்ல நாம்” என்ற இணையப் பக்கம் மற்றும் செயலியை தொடங்கி வைத்து அவர் உரையாற்றினார். சென்னை உட்பட பல்வேறு நகரங்களை சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்களுடன் அவர் காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தை “பொதுச் சேவையில் நான்” என்ற நோக்கில் பயன்படுத்தவேண்டும் என்றும் கூறினார். சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், நாட்டின் நலனுக்கும் தமது பங்கினை அளிக்கமுடியும் என்பது குறித்து விரிவாக அவர் உரையாற்றினார்.
சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை உதாரணங்களுடன் அவர் விளக்கினார்.
இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து பேசிய பிரதமர், பண்டைக் காலத்தில் மழைநீர் சேமிப்பு முறை இருந்ததை நினைவுகூர்ந்தார். குஜராத் போர்பந்தரில் உள்ள அண்ணல் காந்தி இல்லத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தக் கிணற்றை மழைநீர் மூலம் நிரப்பி எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த நிலை இப்போது மாறிப்போய்விட்டது என்று அவர் கூறினார்.
இருப்பினும், சமுதாய முன்னேற்றத்திற்காக தாங்கள் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது என்றார் . கைப்பிடி குடிநீர் குழாயிலிருந்து விழும் தண்ணீரை எப்படி மறுபடியும் பயன்படுத்துவது என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது என்பது விவசாயிகளின் வருவாயை அதிகப்படுத்தும். இதனை அரசால் மட்டும் செய்துவிட முடியாது என்றும், விவசாயிகள் மக்கள் இயக்கமாக இதனை மாற்றவேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புத் திட்டத்தை “பொதுச் சேவையில் நான்” என்ற நோக்கில் பயன்படுத்தவேண்டும் என்றும் கூறினார். சமுதாயத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லவும், நாட்டின் நலனுக்கும் தமது பங்கினை அளிக்கமுடியும் என்பது குறித்து விரிவாக அவர் உரையாற்றினார்.
சமூகத்தில் பின்தங்கியுள்ள மக்களின் முன்னேற்றத்திற்கும், நலனுக்கும் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும் என்பதை உதாரணங்களுடன் அவர் விளக்கினார்.
இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்து பேசிய பிரதமர், பண்டைக் காலத்தில் மழைநீர் சேமிப்பு முறை இருந்ததை நினைவுகூர்ந்தார். குஜராத் போர்பந்தரில் உள்ள அண்ணல் காந்தி இல்லத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தக் கிணற்றை மழைநீர் மூலம் நிரப்பி எப்படி பயன்படுத்தினார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். அந்த நிலை இப்போது மாறிப்போய்விட்டது என்று அவர் கூறினார்.
இருப்பினும், சமுதாய முன்னேற்றத்திற்காக தாங்கள் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருக்கிறது என்றார் . கைப்பிடி குடிநீர் குழாயிலிருந்து விழும் தண்ணீரை எப்படி மறுபடியும் பயன்படுத்துவது என்பது குறித்து சிந்திக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சொட்டுநீர் பாசனத்தை பயன்படுத்தி அதிக மகசூல் பெறுவது என்பது விவசாயிகளின் வருவாயை அதிகப்படுத்தும். இதனை அரசால் மட்டும் செய்துவிட முடியாது என்றும், விவசாயிகள் மக்கள் இயக்கமாக இதனை மாற்றவேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.