“தி.மு.க பிணம் தின்னி கழுகு; எவ்வளவு உயரம் பறந்தாலும், அதன் தன்மை மாறாது” - காய்த்தெடுத்த பொன்.இராதாகிருஷ்ணன்!
“தி.மு.க பிணம் தின்னி கழுகு; எவ்வளவு உயரம் பறந்தாலும், அதன் தன்மை மாறாது” - காய்த்தெடுத்த பொன்.இராதாகிருஷ்ணன்!
கடந்த 2009-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இன அழிப்புப் போரை பின்னணியிலிருந்து நடத்தியது அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ்-திமுக கூட்டணி அரசு. அதுபோல பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைக்காக சென்னை வந்தபோது, அவரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பியது அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி.
இப்படி ஈழத்தமிழர்களுக்கு அடுக்கடுக்கான துரோகத்தை செய்த திமுக -காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், இப்போது அவர்களுக்காக நீலி கண்ணீர் வடிக்கிறது.
தொடர்ந்து 10 ஆண்டுகளாக மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் பங்கெடுத்த திமுக, தமிழகத்திலுள்ள ஈழதமிழ் அகதிகளுக்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. இது வரலாறு. இப்போது ஈழத்தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கின்றனர். போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களின் முகத்திரையை கிழித்துள்ளார், முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன் ராதாகிருஷ்ணன். இதுதொடர்பாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழர்களை, ஜாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் பிரித்து, ஆட்சியில் அமர்ந்தவர்கள் திமுகவினர். அந்த நேரங்களில் இலங்கை தமிழர்களுக்காக திமுக எந்த ஆக்கப்பூர்வமான நல்லதையும் செய்யவில்லை. அவர்கள் இப்போது தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாணவர்களை திசை திருப்பி விடுகின்றனர். இது இலங்கை தமிழர்களுக்கு எதிரானது என்பது போன்ற பொய்யை பரப்பி வருகின்றனர்.
இலங்கை தமிழர்களை பற்றி பேச திமுகவிற்கு என்ன தகுதி இருக்கிறது? திமுக பிணம் தின்னி கழுகுகள். பிணம் தின்னி கழுகுகள் எவ்வளவு உயரம் பறந்தாலும் அதன் தன்மை மாறாது.