கேரளா: ஐந்து நாள் பூஜைக்காக சபரிமலை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில் ஐந்து நாள் பூஜைகளுக்காக ஜூலை 16-ம் தேதி திறக்கப்படுகிறது.

Update: 2022-07-12 02:43 GMT

மலையாள மாதமான கர்கிடகத்திற்கு இங்குள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் ஐந்து நாள் பூஜைகளுக்காக ஜூலை 16-ம் தேதி திறக்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஐந்து நாள் சிறப்பு பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் பெருந்திரளான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்து தான் வருகிறது. 


அந்த வகையில் தற்போது ஜூலை 16ம் தேதியிலிருந்து நடைபெற உள்ள இந்த சிறப்பு பூஜைக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனராரு தலைமையில், மேல்சாந்தி எம்.என்.பரமேஸ்வரன் நம்பூதிரி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு கோயில் கருவறையைத் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு உபதேவதா ஆலயங்கள் திறக்கப்பட்டு 18 புனித படிகளுக்கு அருகில் ஆழி ஏற்றப்பட்டது.


திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TTB) படி, ஜூலை 16 மாலை முதல் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப் படுவார்கள். மெய்நிகர் வரிசை மூலம் தரிசனத்திற்கான இடங்களை முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் மற்றும் நிலக்கல்லில் உள்ள ஸ்பாட் புக்கிங் கவுண்டரில் தங்களைப் பதிவு செய்துகொள்பவர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். ஜூலை 21ம் தேதி இரவு 10 மணிக்கு கோவில் மூடப்படும். 

Input & Image courtesy:The Hindu

Tags:    

Similar News