செந்தில் பாலாஜி விசாரணை விவகாரத்தில் விடாப்பிடியாக நிற்கும் அமலாக்கத்துறை - அடுத்து என்ன?
மருத்துவ சிகிச்சை காரணமாக செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்துவதில் அமலாக்கத்துறைக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கோர்ட்டை நாட அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைதான செந்தில் பாலாஜியை எட்டு நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி அளித்து சென்னை முதன்மை செசன்சு கோர்ட் கடந்த 16 - ஆம் தேதி உத்தரவு தெரிவித்தது. கோர்ட் அலுவலர்கள் மூலம் இந்த உத்தரவு நகல் செந்தில் பாலாஜிக்கு நேரில் வழங்கப்பட்டது. அவர் கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார். செந்தில் பாலாஜி காவலில் எடுக்கும் போது அவரிடம் என்னென்ன கேள்விகளை கேட்க வேண்டும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே முடிவு செய்து கேள்விகளையும் தொகுப்பை தயார் நிலையில் வைத்திருந்தனர்.
எட்டு நாட்களில் முதல் நாளான 16 -ஆம் தேதி அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. கோர்ட்டு உத்தரவு நகலை அமலாக்கத் துறையினர் பெறுவதற்கும் அந்த உத்தரவு நகலை அலுவலர்கள் செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்து கையெழுத்து பெறுவதற்கும் அதன் பின்பு நீதிமன்ற காவலில் இருந்து அமலாக்கத்துறை காவலுக்கு செந்தில் பாலாஜி எடுத்துக் கொள்வதற்கும் இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. இதனால் அன்றைய தினம் செந்தில் பாலாஜினிடம் எந்தவித விசாரணையும் நடத்தப்படவில்லை.
அமலாக்க துறை விசாரணையின் போது மருத்துவ சிகிச்சைக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என கோர்ட் நிபந்தனை விதித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து சிகிச்சை அளித்து வருவதால் அவரிடம் விசாரணை நடத்துவதில் அமலாக்கத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் கோர்ட்டை நாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறி அமலாக்கத்துறை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-