லயோலா கல்லூரி பாதிரி மீது பாலியல் குற்றச்சாட்டு - தகுதி இல்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கியதும் அம்பலம்.!
லயோலா கல்லூரி பாதிரி மீது பாலியல் குற்றச்சாட்டு - தகுதி இல்லாதவர்களுக்கு உதவித் தொகை வழங்கியதும் அம்பலம்.!
லயோலா கல்லூரி நிர்வாகத்திடம் சக பணியாளரான முன்னாள் மாணவர் சங்கத்தை நிர்வகிக்கும் ஒரு பாதிரியாரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதைப் பற்றி புகார் செய்த ஒரு பெண் ஊழியர் கல்லூரி நிர்வாகத்தால் திடீரென்று பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2010ம் வருடம் ஜூலை மாதத்தில் லயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்ட மேரி ராஜசேகரன் என்ற பெண்மணி, பணியில் சேர்ந்து ஆறு மாதங்களுக்கு பின் கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்த சேவியர் அல்போன்ஸ் என்பவர் சங்கத்திற்கு வந்த நிதியிலிருந்து ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் பணத்தை தனிப்பட்ட முறையில் அவர் நடத்தி வந்த அறக்கட்டளைக்கு திருப்பி விட்டதைக் கண்டுபிடித்துள்ளார். அங்கு ஆரம்பித்தன அவருடைய பிரச்சினைகள்.
கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் கல்லூரி நிர்வாகமும் வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள பிறரும் மேரியின் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித பதிலும் இதுவரை அளிக்காததால் வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. முன்னாள் பாம்பே மற்றும் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி மைக்கேல் சல்தானா மேரிக்கு நீதி கிடைக்க உதவும் நோக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி A P சாஹி அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் நீதித்துறை எவ்வாறு வேலை செய்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில் இருப்பதால் இந்த வழக்கில் ஏற்பட்டுள்ள தாமதம் தன்னை வருந்தச் செய்வதாக எழுதியுள்ளார்.
தனது மனுவில் பாதிரியார் அல்போன்ஸ் கல்லூரியில் வழங்கப்படும் உதவித் தொகையையும் தகுதியற்ற மாணவர்களுக்கு வழங்கி முறையற்ற செயலில் ஈடுபட்டார் என்று மேரி குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சினைகளைப் பற்றி கடந்த 2013 ஆம் ஆண்டே கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் பாதிரியார் அல்போன்ஸின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
மேரியின் புகாரை விசாரிப்பதாகக் கூறிய கல்லூரி முதல்வர் அதன் பின்னர் முன்னாள் மாணவர் சங்கம் நிதியை செலவழிக்கும் முன் பொருளாளரின் அனுமதி பெறுவதைக் கட்டாயமாக்கி இருக்கிறார். அப்போதிருந்தே பாதிரியார் அல்போன்ஸ் அவர்கள் இருவரும் சந்திக்க நேர்ந்த ஒவ்வொருமுறையும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை துன்புறுத்தியதாக மேரி தெரிவித்துள்ளார். சில சமயங்களில் அவர் ஒரு பாதிரியாருக்கு கொஞ்சமும் பொருந்தாத முறையில் நடந்து கொண்டதாகவும் அவரது செயல்பாடுகள் தனது குடும்பத்தில் பிரிவினை உண்டாக்கும் அளவுக்கு சென்றதாகவும் மேரி கூறியுள்ளார். "இந்த விஷயத்தை பற்றி நான் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது அவர்கள் என்னை சாந்தப்படுத்த முயற்சித்தார்களே தவிர பாதிரியார் மீது எந்த விதமான முறையான நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.