உத்திர பிரதேசத்தில் வேலை, கல்வி தருவதாக ஏமாற்றி மதம் மாற்ற முயற்சி செய்த தமிழக கிறுஸ்தவ மிஷனரிகள்!

உத்திர பிரதேசத்தில் வேலை, கல்வி தருவதாக ஏமாற்றி மதம் மாற்ற முயற்சி செய்த தமிழக கிறுஸ்தவ மிஷனரிகள்!

Update: 2021-01-05 18:12 GMT
உத்திர பிரதேசத்தில் தமிழர்கள் இருவர் உட்பட ஐந்து பேர் மத மாற்றம் செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நல்ல வேலை மற்றும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க ஏற்பாடு செய்வதாகக் கூறி மதம் மாற்ற முயன்றது தெரிய வந்துள்ளது.   

உத்திர பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் மூளைச்சலவை செய்து மதம் மாற்ற முயன்ற ஐந்து பேர் மீது புதிதாக கொண்டு வரப்பட்ட மதமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரஜத், அஜய் மற்றும் சிரிஷ் குப்தா என்பவர்களோடு தமிழ் நாட்டைச் சேர்ந்த டேவிட் மற்றும் ஜகன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 ஷாஜகான்பூரைச் சேர்ந்த ராம் லக்கான் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விகாஸ் நகர் காலனி என்ற பகுதியில் ஒரு வீட்டில் ஜெபக் கூட்டம் நடப்பதாகவும், அதில் கலந்து கொள்ளுமாறும் ராம் லக்கானுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது பெண்கள், குழந்தைகள் உட்பட 30 பேர் ஜெபம் செய்து கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த ஜெபக் கூட்டம் குற்றம் சாட்டப்பட்டவர்களுள் ஒருவரான சிரிஷ் குப்தாவின் வீட்டில் ஜெபக் கூட்டம் நடந்துள்ளது. அங்கு நல்ல வேலை, குழந்தைகளுக்கு நல்ல கல்வி உள்ளிட்டவை ஏற்பாடு செய்து தரப்படும் என்று கூறி சிலரை கிறிஸ்தவ மதத்தைத் தழுவுமாறு வற்புறுத்தியதாக புகார் அளித்த ராம் லக்கான் கூறியுள்ளார்.

மதம் மாற தான் மறுப்பு தெரிவித்த போது ஜெபக் கூட்டம் என்று சொல்லி அழைத்தவர்கள் அவருடன் பண்ணை போடத் தொடங்கியதாகக் கூறியுள்ளார். எனினும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த சிலர் அந்த இடத்துக்கு வந்து, மதமாற்ற முயற்சி நடப்பதை அறிந்து மிஷனரிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். எனினும் அவர்களிடம் வேலை, கல்வி வழங்குவதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் காவல் துறை யாரையும் கைது செய்யவில்லை.

With Inputs from IndianExpress

Similar News