தென் மாநிலங்களில் பாஜக- விற்கு பெருகிவரும் மக்களின் பேராதரவு!

தென் மாநிலங்களில் பாஜகவிற்கு ஆதரவு மக்களிடையே பெருகி வருவதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Update: 2024-03-19 17:09 GMT

பாஜகவிற்கு தென் மாநிலங்களில் ஆதரவு பெருகி வருவதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகம் மற்றும் கேரளாவில் கணிசமான இடங்களை பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி அடிக்கடி இந்த பகுதிகளுக்கு வந்து பொதுமக்கள் இடையே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக நேற்று பிரதமர் மோடி கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட வாகன அனுபவத்தில் பங்கேற்றார்.சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்நிலையில் பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது :-

தெலுங்கானா கர்நாடகா அல்லது தமிழ்நாடு எதுவாக இருந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிர்பாராத ஆதரவு பெருகி வருகிறது. கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெறும் பாஜக பேரணியில் பங்கேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


SOURCE :Dinathamizh

Similar News