இந்தியாவில் உள்ளவர்கள் இந்துக்களே அதிரடி காட்டிய மோகன் பகவத்!

இந்தியாவில் உள்ளவர்கள் இந்துக்களே அதிரடி காட்டிய மோகன் பகவத்!

Update: 2019-12-26 07:27 GMT

ஐதராபாத்தில் நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். இதற்குமுன் பல்லாயிரக்கணக்கான ஸ்வயம் சேவக் தொண்டர்கள் பங்கேற்ற பேரணி நடைபெற்றது. பேரணி நிறைவில் உரையாற்றிய மோகன் பகவத் , இந்தியாவை தாய் நாடக மதிப்பவர்கள் இந்திய தாயின் பிள்ளைகள். அவர்களை இந்து என்கிறது ஆர்.எஸ்.எஸ் மக்களை எந்த மொழியை பேசுகிறார்கள், எந்த மதத்தை பின்பற்றி வருகிறார்கள்அவர்களின் வழிபாடு எந்த முறையை சார்ந்தது. என பொருட்படுத்தாது . அவர்களை இந்துவாக தான் ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது.


எங்களை பொறுத்தவரை 130 கோடி இந்திய மக்களும் இந்துக்கள் தான் அனைவரும் அவரவராக இருக்க வேண்டும், ஒவ்வொருவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதே ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது .


ஆர்.எஸ்.ஸை இந்துத்துவாதி என சொல்கிறார்கள். ஆம் நாங்கள் இந்திய நாட்டின் பண்பாட்டின்படி இந்துத்துவாதி. ஆர்.எஸ்.எஸ் இந்தியாவிற்காக பணியாற்றுகிறது. தர்மம் தான் என்றும் வெற்றி பெற வேண்டும் என விரும்புவது ஆர்.எஸ்.எஸ், கவிஞர் ரவீந்திரநாத் கூறியது போல அரசியலால் மட்டும் நாட்டில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. மக்களால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும்.
இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. இங்கு வேற்றுமையில் ஒற்றுமை மட்டுமல்ல, வேறுபட்டவர்களையும் ஒன்றிணைத்து சாதனை படைத்துள்ளோம் என்றார்.


Similar News