சாப்பிட அரிசி இல்லை என்பதால் ராஜநாகத்தை சாப்பிட்ட கொடூரம்.!

சாப்பிட அரிசி இல்லை என்பதால் ராஜநாகத்தை சாப்பிட்ட கொடூரம்.!

Update: 2020-04-20 07:21 GMT

அருணாச்சல பிரதேசத்தில் சாப்பிட அரிசி இல்லை என்பதால் பெரிய நாகப் பாம்பை சாப்பிட்ட நபர்கள்.

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அதிகமான விஷப்பாம்புகள் இருக்கிறது. அந்த மாநிலத்தை சேர்ந்த 3 பேர் காட்டுக்குள் சென்று 12 அடி ராஜ நாக பாம்பை வெட்டி தோளில் சுமந்து பாம்பை சமைத்து சாப்பிடுவது போல வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அவர்களிடம் அரிசி இல்லை என்பதால் காட்டுக்குள் சென்று ராஜ நாக பாம்பை பிடித்து வந்தோம் என கூறப்படுகிறது

மேலும் பாம்பின் இறைச்சியை சுத்தம் செய்தபின் வாழை இலையில் வைப்பது போல வீடியோவில் பதிவாகியுள்ளது. இதன் பின்னர் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2524578 

Similar News