வேலூர் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டல்! தொடரும் தி.மு.கவின் வெறியாட்டம்!

வேலூர் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டல்! தொடரும் தி.மு.கவின் வெறியாட்டம்!

Update: 2019-12-27 05:58 GMT

தேசிய குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தவறான கருத்துக்களை மக்களிடையே திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் பரப்பி, கலவரத்தை தூண்டி வருகின்றன. குறிப்பாக முஸ்லிம் சமுதாய இளைஞர்களிடம் மதவெறியை தூண்டி அவர்களை கலவரத்தில் ஈடுபட முயன்று வருகின்றனர்.
தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட மத சிறுபான்மை அகதிகளுக்கு  மறுவாழ்வு கிடைக்கும். இந்தியாவில் வசிக்கின்றவர்களுக்கான சட்டமே அல்ல இது. இதன் மூலம் இந்தியாவில் வசிக்கின்ற முஸ்லிம்கள் உட்பட எந்த பிரிவினருக்கும், எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். குறிப்பாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் தெள்ளத்தெளிவாக புரிந்த விஷயம் இது.  பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இது தொடர்பான நீண்ட, நெடிய விவாதங்கள் நடத்தப்பட்டு, அப்போது எதிர்க்கட்சித் தரப்பில் எம்பிக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மிகத் தெளிவான பதில்களை அளித்து உள்ளார்.



இருந்தாலும் இதை வைத்து, முஸ்லிம் சமுதாய மக்களை திசைதிருப்பி, அவர்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தி, இந்த சட்டத்தின் மூலம் அவர்களை இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பி விடுவார்கள், துரத்தி விடுவார்கள் என்று பீதியை ஏற்படுத்தி, அதன் மூலம் கலவரத்தை உருவாக்கி, குளிர்காய திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களின் முகத்திரையை கிழிக்கும் வகையில், தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தின் நன்மைகள் என்ன? அதன் உண்மை தன்மைகள் என்னென்ன? என்பனவற்றை மக்களிடம் தெளிவாக எடுத்துச் சொல்லி வருகிறார், தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் தலைவர் வேலூர் இப்ராஹிம்.
இதனை சகித்துக் கொள்ள முடியாத திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் வேலூர் இப்ராஹிமுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். கொலை மிரட்டல் விடுவது என்பது திமுகவுக்கு ஒன்றும் புதிதானது அல்ல. காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்ற எழுதப்படாத கொள்கைகளில் இதுவும் ஒன்று.
இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் வேலூர் இப்ராஹிம்.


பின்னர் அவர் கூறியதாவது:-



மோடி அரசு அமல்படுத்தியுள்ளது குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து நாங்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறோம். இதன் மூலம் இஸ்லாமிய மக்களுக்கு துளி அளவுகூட பாதிப்பு இல்லை என்கின்ற உண்மையை எடுத்துச் சொல்லி வருகிறோம். இந்த சட்டத்தை கொச்சைப் படுத்துகின்ற வகையில் இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று திமுக, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பொய் பரப்பி வருகின்றனர்.
இவர்களின் நோக்கம் முஸ்லிம்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது அல்ல. முஸ்லிம் இளைஞர்களை வன்முறை பாதைக்கு இழுத்துச் செல்ல முயல்கின்றனர். அதன்மூலம் தமிழகத்தை கலவர பூமியாக மாற்றி குளிர்காய திட்டமிட்டுள்ளனர்.



இந்த உண்மைகளை மக்களிடம் நாங்கள் கொண்டு செல்வதால், எங்களுக்கு திமுகவினரும் அதன் கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
எனவே அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து உள்ளோம்.
இவ்வாறு வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.



Similar News