பூட்டிய கிடங்கில் மதுபான பாட்டில்களை திருடி அட்டூல்யம், புதுச்சேரியில் நடந்த நூதன சம்பவம்.!

பூட்டிய கிடங்கில் மதுபான பாட்டில்களை திருடி அட்டூல்யம், புதுச்சேரியில் நடந்த நூதன சம்பவம்.!

Update: 2020-04-18 13:38 GMT

ஊரடங்கு உத்தரவு காரணமாக புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள மதுபான கடைகள்,சாராயக் கடைகளை மூட அரசு உத்தரவிட்டு இருந்தது. இதனிடையே மதுபானக்கடைகளில் இருந்து கள்ளத்தனமாக மதுபானங்களை எடுத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த 22-மதுபானக்கடைகளிம் உரிமத்தை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் மதுபானக்கடைக்கள், மதுபான குடேன்கள் மற்றும் சராயக்கடைகளுக்கு கடந்த 20 தினங்களுக்கு முன்பு கலால் துறையினர் சீல் வைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி, மறைமலையடிகள் சாலையில் உள்ள தனியார் மதுபான குடேனின் பூட்டை உடைத்து இன்று அதிகாலை மர்ம நபர்கள் மதுபானங்களை திருடிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக குடேன் உரிமையாளர் ஒதியஞ்சாலை காவல்துறையினருக்கு புகார் அளித்தார்.

அதன் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவியை ஆய்வு செய்தபோது அதிகாலை 2-மர்ம நபர்கள் பூட்டை உடைத்து குடேனுக்கு உள்ளே சென்று மதுபானங்களை திருடிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் குடோனுக்கு அருகாமையில் உள்ள கோவிதசாலை பகுதியை சேர்ந்த இரண்டு போர் மதுபானங்களை திருடிச் சென்றது தெரியவந்தது பின்னர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.


விசாரணையில் மதுபானக்கடைகள் திறக்காத காரணத்தால் , தாங்களாகவே குடேனை உடைத்து தங்களுக்கு தேவையான சரக்கை எடுத்துக்கொண்டதாகவும், சிசிடிவியில் முகம் பதியவில்லை என்றால் இருவரும் சிக்கி இருக்க மாட்டோம் என போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ரூபாய்-10ஆயிரம் மதிப்பிலான மதுபானங்களை அவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.

Similar News