ஏவுகணை முதல் இசை வரை பெண்களின் சாதனை: பெண் சக்தியை போற்றுவோம் - ஜனாதிபதி முர்மு

ஏவுகணை முதல் இசை வரை பல துறைகளில் பெண்கள் சாதனை நிகழ்த்தி இருப்பதாக ஜனாதிபதி பெருமிதத்துடன் கூறினார்.

Update: 2023-08-23 08:38 GMT

டெல்லியில் மானக்ஷா மையத்தில் ராணுவ அதிகாரிகளின் மனைவிமார்கள் நல சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது :-


நாட்டுக்கு பங்காற்றிய அனைத்து வீர பெண்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பழைய பழமொழி இருக்கிறது. ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னாலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று. அதை இன்று ஒவ்வொரு வெற்றிகரமான ஆணுக்கு அருகிலும் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்ல வேண்டும்.


சமுதாய முன்னேற்றத்துக்கும் தேசத்தின் முன்னேற்றத்துக்கும் பெண்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. பெண் சக்தியை போற்றுவோம். ஏவுகணை முதல் இசை வரை அனைத்து துறைகளிலும் பெண்கள் மாபெரும் உயரத்தை எட்டியுள்ளனர். அனைத்து தடைகளையும் சந்தித்து முறியடித்து சாதனை செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார் . துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கரின் மனைவி சுதேஷ் தன்கர், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி ஆகியோரும் பங்கேற்றனர்.

Similar News