வெற்றி வேல்.. வீர வேல் என்று தனது உரையை பிரதமர் மோடி தொடக்கம்.!

வெற்றி வேல்.. வீர வேல் என்று தனது உரையை பிரதமர் மோடி தொடக்கம்.!

Update: 2021-02-25 17:53 GMT

கோவை கொடிசியா மைதானத்தில் பாஜக சார்பில மிக பிரமாண்டமான முறையில் மாநாடு நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, வெற்றிவேல், வீரவேல் எனக் கூறி தனது பரப்புரையைத் தொடங்கினார் பிரதமர் மோடி.

இதன் பின்னர் வணக்கம் தமிழ்நாடு, வணக்கம் கோயம்புத்தூர் என்று தமிழில் பேசினார். கொங்கு மண்டலத்தில் பிரம்மாண்ட ஆலங்கள் உள்ளது. உலகளவில் மக்களை சுண்டியிழுக்கின்றது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் மூலம் புதிய ஆட்சியை மக்கள் தேந்தெடுக்க உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி மத்திய அரசும், மாநில அரசும், கூட்டுறவு கூட்டாட்சி என்ற தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு பேசினார்.
 

Similar News