நாட்டை வழிநடத்தும் பக்குவம் ராகுல்காந்தியிடம் இல்லை.. சரத்பவார்

நாட்டை வழிநடத்தும் பக்குவம் ராகுல்காந்தியிடம் இல்லை.. சரத்பவார்

Update: 2020-12-05 07:49 GMT

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா எழுதிய சுயசரிதை புத்தகத்தில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை பற்றி எழுதியிருந்தார். அதில், ராகுல் காந்தி மிகவும் பதற்றமானவர், பக்குவப்படாமல் இருக்கிறார். மாணவரை போன்று பாடங்களை நன்றாகப் படித்து ஆசிரியரை கவரும் திறமை படைத்தவராக இருக்கலாம்.

ஆனால் குறிப்பிட்ட பாடத்தில் ஆழ்ந்த அறிவு பெறக்கூடிய விருப்பமோ அல்லது தகுதியோ இல்லாதவராக இருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மராத்தி பத்திரிகை ஒன்றுக்காக முன்னாள் எம்.பி. விஜய் தார்தா சரத்பவாரிடம் ஒரு பேட்டியை எடுத்துள்ளார். அப்போது சரத்பவாரிடம், ராகுல் காந்தியை நாட்டை வழிநடத்தும் தலைவராக இந்த தேசம் ஏற்றுக்கொள்ளுமா? எனக் கேட்டார். அதற்கு சரத்பவார் பதில் கூறியதாவது: இது தொடர்பாக சில கேள்விகள் எழுகின்றன. அவர் இன்னும் பக்குவம் பற்றாக்குறை உள்ளவராக தான் தோன்றுகிறது என்றார்.


ராகுல் காந்தி பற்றி அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கூறிய கருத்துக்கள் பற்றி கேட்டபோது, அதற்கு பதிலளித்த சரத்பவார், “நாம் அனைவரின் கருத்தையும் ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய நாட்டின் தலைமையை பற்றி நான் என்ன வேண்டுமானாலும் கூறமுடியும். ஆனால் வேறு நாட்டின் தலைமையை பற்றி பேசமாட்டேன். ஒவ்வொருவரும் அவர்களுக்கான எல்லை மற்றும் அளவுகோலை கடைப்பிடிப்பது அவசியம். என்னை பொருத்தவரை ஒபாமா எல்லை மீறி பேசிவிட்டார் என்றே தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியின் எதிர்காலம் மற்றும் கட்சிக்கு ராகுல் காந்தி தடையாக இருக்கிறாரா என்று கேள்வி கேட்கப்பட்டது: சரத்பவார் பதில் அளிக்கையில், எந்த ஒரு கட்சியின் தலைவரும் கட்சியின் அமைப்புக்குள் என்ன விதமான தன்மையை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ, அதைப்பொருத்தே எதிர்காலம் அமைகிறது.

எனக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரின் குடும்பம் இடையே வேறுபாடு இருந்தது. ஆனால், இன்றும் காங்கிரஸ் தொண்டர்கள் காந்தி- நேரு குடும்பத்தினர் மீது பாசத்துடன், பற்றுடன் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.

Similar News