தலைவர் பதவியை தூக்கி எறியும் ராகுல்.. கட்சியை 4 ஆக பிரித்து கொள்ள முடிவெடுத்த காங்கிரஸ் தலைமை.!

தலைவர் பதவியை தூக்கி எறியும் ராகுல்.. கட்சியை 4 ஆக பிரித்து கொள்ள முடிவெடுத்த காங்கிரஸ் தலைமை.!

Update: 2020-12-30 20:16 GMT

கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து ராகுல் காந்தி கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் கட்சிக்கு இடைக்கால தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை சரியில்லாததால் அவரால் சரியாக செயல்பட முடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக 18 மாதமாக சரியான தலைமை இல்லாமல் காங்கிரஸ் கட்சி தத்தளித்து வருகிறது. பல மாநிலங்களின் சட்டசபை, உள்ளாட்சி தேர்தல், இடைத் தேர்தல்கள் நடைபெற்றது. இதில் கடுமையான சரிவை காங்கிரஸ் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

எனவே இதற்கு அதிருப்தி தெரிவித்து 23 மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினார்கள். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடைபெற்றது. இதனையடுத்து சமீபத்தில் சோனியா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மூத்த தலைவர்கள் மற்றும் அதிருப்தி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது ராகுல் காந்தி மீண்டும் தலைவராக வர வேண்டும் என்று கூட்டத்தில் வற்புறுத்தினார்கள். அந்த பதவியை ராகுல் ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த மாதம் அல்லது பிப்ரவரி மாதத்தில் ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன.

இந்நிலையில், தலைவர் பதவியை ஏற்க ராகுல் காந்தி தயங்குவதாக தகவல் வந்துள்ளது. அவருக்கு நெருக்கமாக இருக்கும் தலைவர்களே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ராகுல் வெளிநாடு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் நீண்ட நாள் கழித்தே இந்தியாவுக்கு திரும்ப வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். ராகுல் காந்தி இவ்வாறு பிடிவாதமாக இருப்பதால் மாற்று வழிகளை யோசிக்க வேண்டும் என்று அதிருப்தி தலைவர்கள் சிலர் கட்சி மேலிடத்தில் வற்புறுத்தியுள்ளனர்.

அதாவது சோனியா தலைவராக இருப்பது, ஆனால் கட்சி பணிகளை கவனிப்பதற்காக காங்கிரசை 4 மண்டலங்களாக பிரிக்க வேண்டும். 4 துணைத்தலைவர்களை நியமனம் செய்து ஒவ்வொரு மண்டலத்தின் பொறுப்புகளையும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும். கட்சியின் முக்கிய முடிவுகளை இதன் 4 தலைவர்களும் இணைந்து எடுக்க வேண்டும் என்று யோசனை கூறியுள்ளனர்.
தற்போது தலைவர்கள் இல்லாமல் காங்கிரஸ் கட்சி தள்ளாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Similar News