கையில் கட்டை, இரும்பி கம்பிகளுடன் அமைச்சரை தாக்க வரும் மம்தா பானர்ஜி கட்சி தொண்டர்கள் - கலவர பூமியான மேற்கு வங்கம்!

Update: 2021-05-07 00:45 GMT

மேற்குவங்கத்தின் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் பயணம் செய்த கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் வி.முரளிதரன் பயணம் செய்த கார் மற்றும் அவரது வாகனத்திற்கு பாதுகாப்பாக சென்ற கான்வாய் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோக்களை மத்திய அமைச்சர் முரளிதரன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

2 நாள் பயணமாக மேற்குவங்கம் சென்றுள்ள முரளிதரன், மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் கான்வாய் வாகனங்களுடன் சென்று கொண்டிருந்த போது, தனது வாகனம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களால் தாக்கப்பட்டதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கையில் கட்டைகள், இரும்பி கம்பிகளுடன் முரளிதரனின் வாகனத்தை வழிமறிக்கும் கும்பல் ஒன்று காரின் பின்பக்க கண்ணாடியை கட்டையால் அடித்து உடைக்கிறது.

"திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்களால் எனது வாகன கான்வாய் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன, எனது சகாக்கள் காயமடைந்துள்ளனர். என்னுடைய பயணம் தடுத்து நிறுத்தப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

மேற்குவங்கத்தில் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து 4 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு ஒன்றை உள்துறை அமைச்சகம் அமைத்து மேற்குவங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar News