தி.மு.க கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன் மணல் கடத்தும் லாரி!

Update: 2021-07-23 02:59 GMT

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருவேம்பத்தூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு பகுதியில் திமுக கொடி கட்டிய காரின் பாதுகாப்புடன் மணல் கடத்தும் லாரியை காவல்துறை துரத்திச் சென்ற பரபரப்பு காட்சி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ காட்சியின் அடிப்படையில் நியூஸ் ஜே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

மணல் கடத்தப்படுவதாக காவல்துறைக்கு வந்த புகாரை தொடர்ந்து, அது குறித்து விசாரணை செய்ய காவல்துறையினர் நேரில் சென்ற போது, ஆற்றில் இருந்து மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று புறப்பட்டுள்ளது. அந்த லாரியை மடக்கிப் பிடிக்க போலீசார் முயன்றுள்ளனர்.

ஆனால் மணல் கடத்தல் லாரிக்கு பாதுகாப்பாக சென்ற திமுக பிரமுகர் ஒருவரின் கார் காவல்துறைக்கு வழிவிடாமல் தடுத்துள்ளனர். ஒரு கட்டத்தில் மணல் லாரி தப்பிச் சென்ற நிலையில், பாதுகாப்புக்குச் சென்ற திமுக பிரமுகரின் காரை காவல்துறையினர் மடக்கி பிடித்தபோது, அவர் எஸ்.எஸ்.ஐ ஒருவரின் பெயரை கூறி அவரின் அனுமதியோடு தான் மணல் கடத்தப்படுவதாக கூறியுள்ளனர். 

இத விவகாரத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாக களமிறங்கி ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மணல் கடத்தல் சம்பவத்தில் வழக்கு பதிவு செய்யாமல் விடப்பட்ட லாரி மற்றும் மணல் கடத்தலுக்கு பாதுகாப்பாக வந்த திமுக கொடி கட்டிய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News