மாசுபாடு இல்லாத காகித பாட்டில்கள்: ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு.!

மாசுபாடு இல்லாத வகையில் காகித வாட்டர் பாட்டில்களை அறிமுகப்படுத்தும் ஸ்டார்ட்-அப் நிறுவனம்.

Update: 2021-10-02 13:32 GMT

தற்பொழுது நொய்டாவில் செயல்பட்டு வரும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களுக்கு மாற்றாக காகித பாட்டில்களை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். முழு செயற்கை பிளாஸ்டிக்குகள், இன்று உலக சுகாதார மாசுபாட்டிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. ஆறுகள், கடல்கள் என்று அனைத்து பரப்புகளிலும் பிளாஸ்டிக்குளின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த சூழலில், நொய்டாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று, கக்ஸி பாட்டில்கள் மற்றும் மக்கும் காகித கழிவுகளைக் கொண்டு வாட்டர் பாட்டில்களை வடிவமைத்துள்ளனர். இரண்டரை வருட தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர், காகிதத்தின் மீது ஒரு சவ்வு உருவாக்கி வடிவமைத்துள்ளது. இந்தப் பாட்டில்கள் எளிதில் மக்கும் தன்மையுடையதாகவும், கசிவுகள் ஏதும் இல்லாமலும் இருக்கும் என்று நிறுவனம் சார்பில் கூறியுள்ளது.


இதைப் பற்றி இந்த நிறுவனத்தின் உரிமையாளர் கூறுகையில், "நாங்கள் தயாரித்துள்ள சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத பாட்டில் 2022ம் ஆண்டு முதல் விற்பனை சந்தைக்கு வரும் எனத் தெரிவித்துள்ளார். இந்த பாட்டில் இப்போது இருக்கும் சூழலில் 6 மாதங்கள் வரை பயன்படுத்த முடியும் எனக் கூறியுள்ள அவர், பிளாஸ்டிக்கால் உலகம் எதிர்கொண்டிருக்கும் காலநிலை மாற்ற அச்சுறுத்தலுக்கு எங்கள் நிறுவனத்தின் இந்த கண்டுபிடிப்பு உதவியாக இருக்கும்" என்றும் அவர் கூறினார்.  


ஐ.நா அமைப்பின் தகவல்படி, ஆண்டொன்றுக்கு 300 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உலகம் முழுவதும் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் கழிவுகளின் எடை, ஒட்டுமொத்த உலகத்தில் வசிக்கும் மக்களின் எடைக்கு நிகரானது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியப்படும் ஷாம்பு, கண்டிஷ்னர், ஹேண்ட்வாஷ் பாட்டில்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மட்டுமே இதில் சரிபாதி இருப்பதாக ஐ.நா தெரிவிக்கிறது. ஆண்டு ஒன்றுக்கு 8 மில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் பெருங்கடல்களில் குவிக்கப்படுகின்றன. இதேநிலை தொடர்ந்தால் 2050 ஆம் ஆண்டுக்குள் கடல்களில் இருக்கும் மீன்களை விட பிளாஸ்டிக்குகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். நொய்டா ஸ்டார்ட் அப் நிறுவனம் தயாரித்துள்ள புதிய காகித பாட்டில்களுக்கு தேவையான மூலப்பொருட்களான காகித கழிவுகள் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள பெண் தொழில்முனைவோர் மையத்துடன் இணைந்து உருவாக்கி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Input & Image courtesy:News18

 


 


Tags:    

Similar News