சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சூப்பர் ஹீரோ: ட்வீட் செய்த ஆனந்த் மகேந்திரா !

ஆனந்த் மகேந்திரா அவர்கள் செய்த ட்வீட் மூலம் தற்பொழுது சூப்பர் ஹீரோவாக வலம் வருபவர் இவர்தான்.

Update: 2021-10-31 12:57 GMT

உலகின் டாப் 10 கார் நிறுவனங்களில் ஒன்று மஹிந்திரா நிறுவனம். இதன் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. அவர்கள் இவர் எப்பொழுதும் சமூக வலை தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இப்பொழுது உத்வேகம் தரும் ஒரு பாசிட்டிவ் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். கதைகள் மட்டும் அல்ல, பார்க்கும் நிகழ்வுகள் கூட அப்படிதான். நம் வாழ்வில் சில சமயம் அசாதாரணமான மனிதர்களை பற்றி கேள்விப்படுவதுண்டு. அப்படிப்பட்ட ஒருவர் தான் அலக் நடராஜன். நடராஜன் டெல்லியில் வசித்து வரும் நிலையில், தற்போது டெல்லியில் ஆங்காங்கே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. 


இதனால் மக்கள் தினமும் குடிநீருக்காக பல்வேறு கிலோ மீட்டர்கள் வரை செல்லும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்று யோசித்த நடராஜன், டெல்லி முழுவதும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குடிநீரை வழங்க வேண்டும், அதுவும் ஏழை மக்களுக்கு என்று முடிவெடுத்தார். அதன்படி தற்போது வரை டெல்லி முழுவதும் 15க்கும் மேற்பட்ட தண்ணீர் ஸ்டாண்ட்களை அமைத்து மக்களுக்கு பேருதவி புரிந்து வருகிறார். எனவே இந்த நபரை பற்றிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, மார்வெல்லில் வரும் ஹீரோக்களின் சக்தியை விட, அதிக சக்தி வாய்ந்த 'சூப்பர் ஹீரோ' இவர் தான். 




நடராஜன் என்பது இவரது பெயர் ஆகும். இங்கிலாந்தில் தொழிலதிபராக இருந்தவர். புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த இவர் ஏழைகளுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்தியா வந்தார். தற்போது ஏழைகளின் குடிநீர் பிரச்சினையை தீர்த்து, மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளீர்கள். உங்களின் சமூக சேவைக்கு நன்றி என்று ஆனந்த் மகேந்திரா குறிப்பிட்டுள்ளார்.

Input & Image courtesy:Republicworld



 


Tags:    

Similar News