கள்ளச்சாரயத்திலும், ஊறலிலும் வாயை கொப்பளிச்சா பின்ன தள்ளிவைக்காம? - தி.மு.க சாதியை கூறியதா?

Update: 2022-05-24 14:57 GMT

திராவிடர் தெலுங்கர் முன்னேற்ற கழகத்தை நடத்தி வரும் காமாட்சி நாயுடு என்பவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஜாதி ஒழிப்பு இல்லை என்றால், இன்னைக்கி உலகம் 21ம் நூற்றாண்டு நாகரகத்தின் உச்சியில் இருக்கிறோம். இன்னுமே காலையில் எந்திரிச்சமோ, குளிச்சமோ நல்ல முறையில் நீட்டா டிரஸ் பன்னமோ, நாம் செய்யும் தொழிலே தெய்வம் என்று அந்த தொழிலை செய்தோமா? நமது வாழ்க்கையை உயர்த்தினோமோ இல்லாமல் ஒரு இனம் இருக்கிறது தமிழகத்தில்.

அதாவது என்னானா காலையில் எந்திரிச்ச உடனே பல் துலக்காமல், கஞ்சியிலும், ஊறலிலும், கள்ளச்சாராயத்திலும் வாய் கொப்பளிச்சிக்கிட்டு, அவ அங்க வரும்போதே இங்க வாடை அடிக்கிறது. அப்படி வாடை அடித்தால் அவன் வீட்டில் எவன் சம்மந்தம் பன்னுவான். ஒரு ஒழுக்கம் வேண்டாமா, ஒழுக்க நெறி இருக்கிறதாலதான் ஓபி.ராமனுடைய கொளுந்தியாளை திரு.அழகிரிக்கு கலைஞர் திருமணம் செய்து வைத்தார். அது எத்தனை வருஷம் கிட்டத்தட்ட 40 வருஷத்துக்கு முன்னாடியே களப்புத் திருமணம் கலைஞர் வீட்டில் நடந்தது. இல்லிங்களா அது மாதிரி இருந்தால் எல்லா இடங்களிலும் திருமணம் செய்து கொள்ளலாம்.

இன்றும் தீண்டதகாத ஜாதியாகவே இன்னும் வாழ்ந்துட்டு இருக்கின்றார்கள். இவர்களை என்னைக்கி திருத்துவது. மேலும், கோட் சூட் போடுகிறார்களே, பட்டியலின ஓட்டு தேவையில்லையா உங்க கூட்டணிக்கு என்றார். அதற்கு பதில் அளித்த அவர், கோட், சூட் எல்லாம் வாடகைக்கு எடுத்து போட்டு திரிகிறார்கள். மேலும், திருமாவளவன் கூட்டணிக்கு வரும்போது இத்தனை சீட் என்றுதான் வருகிறார். கூட்டணிக்காகவே ஓட்டு போடுகிறார்கள். நாங்கள் கூப்பிடவில்லை, அவரே கூட்டணிக்கு வந்தாரா. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News