ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகைள் பற்றி வெளியான செய்திக்கு மத்திய அரசு மறுப்பு!

Update: 2022-06-17 13:23 GMT

வருகின்ற ஜூலை 1ம் தேதி முதல் மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இந்திய ரயில்வே மீண்டும் வழங்க இருப்பதாக வெளியான தகவல்களை மத்திய அரசு மறுத்துள்ளது.

இந்திய ரயில்களில் மூத்த பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்தில் சலுகைகள் வழங்கப்படுவதாக சில ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் கசிந்தது. இதனை பலர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகள் வழங்குவது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் ரயில்வே அமைச்சகம் வெளியிடவில்லை எனவும், தற்போது வரையில், நோயாளிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News