திருச்செந்தூர் முருகன் கோவிலில் யாகம் நடத்திய முதல்வர் மருமகன் - கெடுபிடிகளால் சாமி கும்பிட வந்த பக்தர்களுக்கு சிரமம்!

Update: 2022-08-04 02:30 GMT

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி குகை அருகே யாகம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் , குடும்பத்தினருடன் யாகம் நடத்தியது பக்தர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக சிறப்பு யாகம் நடத்தி வழிபடுகின்றனர். இவ்வாறு நடத்தப்படும் யாகங்கள், இதற்கு முன்னர் வள்ளி குகை அருகே நடத்தப்பட்டு வந்ததன.

ஆனால் அண்மை காலமாக வள்ளி குகை அருகே யாகம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி காலை தமிழக முதலமைச்சரின் மருமகன் சபரீசன், ஜோசியருடன் அனுமதி மறுக்கப்பட்ட இடமான வள்ளி குகை அருகே சிறப்பு யாகம் நடத்தினார்.

இதனால் காலை 6 மணியிலிருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் வள்ளி குகை அருகே செல்வதற்கு அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர்.


Similar News