"ஒரு வேலையும் செய்யாமல் நீ மந்திரியா இருக்க" - முதல்வரின் நிம்மதிக்கு மேலும் ஒரு இடி இறக்கிய அமைச்சர் கே.என்.நேரு!

Update: 2022-11-11 04:28 GMT

தமிழ்நாடு கலெக்டர் அலுவலகத்தில் நடநாத அரசின் சாதனை விளக்க புகைப்படக்கண்காட்சியை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நகராட்சி அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் இணைந்து திறப்பதற்காகச் சென்றனர்.

அப்போது அமைச்சர் கே.என்.நேரு, புகைப்படக்கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைக்க அமைச்சர் தா.மோ.அன்பரசனை ஒருமையில் அழைத்ததோடு, எந்த வேலையும் செய்யாமல் இருப்பதற்கு நீ ஒரு மந்திரியா என்று கேட்டார்.

இது அங்கிருந்த மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் திமுகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. ஏற்கெனவே, அமைச்சர் கே.என்.நேரு மீது சென்னை மேயரை ஒருமையில் பேசியது சர்ச்சையானது. 

Full View


Similar News