நான் எப்பவுமே இரட்டை இலைதான் - பாட்டி சொன்ன பதிலை கேட்டு ஆடிப்போன திமுக அமைச்சர்!

Update: 2023-07-28 02:01 GMT

தமிழகத்தில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் திட்டம் என்ற பெயரில் மாதம் ரூ.1000 கொடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இத்திட்ட விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியை முதல்வர் ஸ்டாலின் தருமபுரியில் சமீபத்தில் துவக்கி வைத்தார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் வழங்கும் முகாமை பார்வையிட சென்றார்.

அப்போது விண்ணப்பம் வாங்க வந்த மூதாட்டி ஒருவரிடம் 1000ரூபாய் யார் கொடுக்கிறாங்கன்னு தெரியுமா என பொன்முடி கேட்டார். 

மூதாட்டி பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, விண்ணப்பத்தை நிரப்பும் பெண்ணோ முதல்வர் ஸ்டாலின்னு சொல்லுங்க எனக் கூறினார்.

அதைச்கேட்டு அந்த மூதாட்டி இல்ல இல்ல.. நான் எப்பவுமே இரட்டை இலைதான் என்று சொல்ல அதைக்கேட்டு பொன்முடி புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டார்.

அவரை இடைமறித்த பொன்முடி போதும் போதும் எனக் கூறி பேச்சை நிறுத்தினார். திமுக திட்டங்களுக்கு விண்ணப்பிக்க வந்து, அமைச்சர் முன்னால் இரட்டை இலைதான் என மூதாட்டி பேசியது அங்கு திடீரென பரபரப்பை ஏற்படுத்தியது.


Similar News