டிஜிட்டல் மயமாக்களில் மாஸ் காட்டும் மோடி அரசு.. மொபைல் சேவைகளில் புதிய மாற்றம் அறிமுகம்..

Update: 2023-08-18 07:08 GMT

நாட்டில் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதால், ஆன்லைன் சேவைகளைப் பெறுவதற்கு மொபைல் சேவைகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் இணைப்பு என்பது சமூக, பொருளாதார மற்றும் மாற்றத்திற்கான இயக்கத்திற்கு உதவுகிறது. எனவே, மொபைல் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை எளிதாக்குவதற்காக தொலைத் தொடர்பு வளங்களைப் பாதுகாப்பாக பயன்படுத்துவதை ஊக்குவிப்பது முக்கியம்.


பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களைப் பராமரிக்கும் அதே நேரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் சமூகத்தை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் மாற்றம் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இரண்டு சீர்திருத்தங்களை நேற்று அறிமுகம் செய்தார்.


அச்சிடப்பட்ட ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அச்சிடப்பட்ட ஆதாரின் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மக்கள்தொகை விவரங்கள் கட்டாயமாக பெறப்படும். மொபைல் எண் துண்டிக்கப்பட்டால், அது 90 நாட்களில் காலாவதியாகும் வரை வேறு எந்த புதிய வாடிக்கையாளருக்கும் ஒதுக்கப்படாது. ஒரு சந்தாதாரர் தனது சிம் மாற்றுவதற்கு முழுமையான கேஒய்சி- ஐ மேற்கொள்ள வேண்டும், மேலும் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு 24 மணி நேர தடை இருக்கும். ஆதார் இ-கேஒய்சி செயல்பாட்டில் கட்டைவிரல் ரேகை மற்றும் கருவிழி அடிப்படையிலான அங்கீகாரத்திற்கு கூடுதலாக, முக அடிப்படையிலான பயோமெட்ரிக் அங்கீகாரமும் அனுமதிக்கப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பத்தை விழிப்புடனும் மேற்பார்வையுடனும் இணைப்பதன் மூலம், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான தகவல்தொடர்பு சூழலை வழங்குவதற்காக தொலைத்தொடர்பு வெளியில் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை ஊக்குவிக்கும் பணியில் மோடி அரசு உறுதியாக உள்ளது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News