நார்வேக்கு பயணம் மேற் கொண்டுள்ள மத்திய அமைச்சர்..இந்தியா குறித்து பெருமை கொள்ளும் தருணம்..

Update: 2023-08-26 03:41 GMT

மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தலைமையில், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் உள்ளிட்ட தூதுக்குழு நார்வே சென்றது. அக்வா நோர் 2023 கண்காட்சியில் பங்கேற்ற தூதுக்குழு, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறையில் இந்தியாவுக்கும் நார்வேக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் தொலைநோக்கு பார்வையுடன் வெளிநாட்டு பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியது.


கண்காட்சியின் இரண்டாவது நாள் நார்வேயின் பெல்ஸ்விக் வருகையுடன் தொடங்கியது, அங்கு தூதுக்குழு நார்வே நிறுவனமான லெரோயின் ஸ்மோல்ட் உற்பத்தி வசதியை அதன் கடற்கரை மறுசுழற்சி நீர்வாழ் உயிரின அமைப்பு (ஆர்ஏஎஸ்) இல் பார்வையிட்டது. மேலும், நார்வேயின் ஸ்டோர்ஸ்கோயாவில் உள்ள லெரோயின் சால்மன் குஞ்சு பொரிப்பகங்களையும் உயர்மட்டக் குழு பார்வையிட்டது. நார்வேயில் இரண்டாவது பெரிய தொழிலாக நீர்வாழ் உயிரின வளர்ப்புத் உள்ளது, மேலும் நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்கள் கிட்டத்தட்ட 1000 பண்ணைகளை கரையோரப் பகுதிகளில் அமைத்துள்ளன.


தள வருகைக்குப் பிறகு, தூதுக்குழுட்ரோன்ஹெய்ம் ஸ்பெக்ட்ரமில் உள்ளஅக்வா நோர், 2023 கண்காட்சியைப் பார்வையிட்டதுமற்றும் பங்கேற்ற நிறுவனங்களுடன் கலந்துரையாடியது மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளைப் பற்றி விவாதித்தது. கண்காட்சி சுற்றுப்பயணத்தின் போது, மிகப்பெரிய பயோடெக் கண்டுபிடிப்பாளர் மற்றும் அண்டார்டிகா கிரில் அறுவடை நிறுவனமான அகர் பயோமரைனின் ஸ்டாலில், சந்திரயான் -3 இன் இறுதி கட்ட தரையிறக்கம் திரையிடப்பட்டது, இது அங்கிருந்த அனைவராலும் பாராட்டப்பட்டது. நிலவின் தென்துருவத்தில் நிலவின் லேண்டர் வரலாற்று சிறப்புமிக்க முறையில் தரையிறங்கியதற்கு அமைச்சர் திரு. 'லூனா' என்று பெயரிடப்பட்ட அறையில் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த நார்வே தரப்பு, பின்னணியில் சந்திரனுடன் இரு அமைச்சர்களையும் புகைப்படம் எடுக்கும் வாய்ப்பைப் பெற்றது தற்செயலானது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News