தமிழக DGP சைலேந்திர பாபுவை சைக்கோ என கொச்சையாக பதிவிட்ட கம்யூனிஸ்ட் ஆபாச பேச்சாளர் சுந்தரவள்ளி!

Update: 2021-11-25 05:56 GMT

ஆபாச பேச்சுக்களுக்கு பெயர்போனவர் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்த சுந்தரவள்ளி. இவர் கலந்துக்கொள்ளும் டிவி விவாதங்கள் முதல் மேடைப்பேச்சு வரை ஆபாச பேச்சுக்களை பேசுவதில் பிரசித்தி பெற்றவர்.

அதேபோல, தன் சித்தாந்தத்துக்கு எதிரானவர்களை மூன்றாம் தரத்தில் வசைபாடுவதிலும் வல்லவர். இவர் தற்போது தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவை சைக்கோ பாபு என ஒரு ட்விட்டர் பயன்பாட்டாளர் பதிவிட்டதை லைக் செய்துள்ளது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.


சுந்தரவள்ளி பெயரளவில் கம்யூனிஸ்ட் கட்சிக்காரராக இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சித்தாந்தங்களை பரப்புவதைக் காட்டிலும், தி.மு.க, தி.க-வுக்கு தான் முழு நேரம் வேலை செய்துக்கொண்டு இருக்கிறார் என குமுறுகின்றனர் கம்யூனிஸ்ட் தோழர்கள்.

சுந்தரவள்ளியின் ஆபாச பேச்சுக்கள் கட்டுக்கடங்காமல் போகவே பல டிவி சேனல்களை இவரை தங்கள் விவாதங்களுக்கு அழைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தமிழக காவல்துறை தலைமை பொறுப்பில் இருக்கும் டிஜிபி சைலேந்திர பாபுவை குறித்து எல்லை மீறி பதிவிட்டு வரும் சுந்தரவள்ளி மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News