ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #JusticeForLavanya : பள்ளி மாணவிக்கு நீதி கிடைக்குமா?

Update: 2022-01-20 13:44 GMT

திருக்காட்டுப்பள்ளியில் இயங்கிவரும் புனித இருதய மேல்நிலை பள்ளியில் படித்த  12ஆம் வகுப்பு மாணவியை பள்ளி நிர்வாகம் மதம் மாறுமாறு வற்புறுத்தியதால் விஷம் அருந்தி மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதனை தொடர்ந்து ட்விட்டரில் #JustForLavanya என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. பள்ளி மாணவிக்கு நீதி கேட்டு இணைய வாசிகள் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இந்த சம்பவத்தை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

தஞ்சையில் பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அதன் காணொளியையும் ட்விட்டர் வாசிகள் பகிர்ந்து வருகின்றனர். 

Tags:    

Similar News