இந்தியாவின் முதல் முறையாக 5G சேவை - பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்!

இந்தியாவில் முதன் முதலாக 5G சேவை அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது.

Update: 2022-09-25 03:38 GMT

அக்டோபர் 1ஆம் தேதி இந்தியாவில் அதிக இணையதள சேவையான 5G நெட்வொர்க் சேவையை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லியில் தொடங்கி வைக்கிறார். அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நான்காம் தேதி வரை தலைநகர டெல்லியில் மொபைல் மாநாடு நடக்கிறது. இதில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவில் 5G நெட்வொர்க் சேவையை நாடு முழுவதும் தொடங்கி வைக்க இருக்கிறார். அதிவேக இணையதள வசதியை கொடுக்கும் 5G சேவை என்பது இந்தியாவில் முதல்முறையாக தற்போது வர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.


5G சேவைகளுக்கான முழுவதுமான ஏலம் முடிந்துவிட்ட நிலையில் நாடு முழுவதும் இதனை நடைமுறைப் படுத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 5G சேவைகளை ஏலம் எடுத்ததில், ஜியோ நிறுவனம் முதல் நிலையில் உள்ளது. அதற்கு அடுத்த வகையில் ஏர்டெல் நிறுவனம் முன்னிலையில் இருக்கிறது. 5ஜி இந்திய முழுவதும் கொண்டு செல்வதற்கு 80 சதவீத வேலைகளை முடிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்து இருந்தது. அதில் தற்போது 50 சதவீத வேலைகள் முழுமையாக முடிக்கப்பட்ட நிலையில் மீண்டும சில மாதத்தில் மொத்த வேலைக்கு முடியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


இது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி கூறுகையில், 5ஜி சேவை என்பது இந்தியா முழுவதும் பயன் தரக்கூடிய மிகப்பெரிய சேவைகளின் தொகுப்பு ஆகும். இதன் மூலம் சிறப்பான இணையதள வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதன் மூலமாக பல்வேறு பயன்களை இந்தியா பெற முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News