தாஜ்மஹால் போன்ற வீட்டின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் !

தன் மனைவியின் மீது கொண்ட அன்பின் காரணமாக தாஜ்மஹால் போன்று அச்சு அசலாக வீட்டைக் கட்டி பரிசாக வழங்கிய கணவர்.

Update: 2021-12-10 13:47 GMT

இந்தியாவில் மிகப்பெரிய நினைவுச் சின்னமாக தாஜ்மஹால் விளங்கி வருகிறது. இது காதலின் அடையாளமாகவும் அறியப்படுகிறது. காரணம் இதற்குப் பின்னால் இருக்கும் வரலாறுதான். காதலுக்காக மும்தாஜ் நினைவாகவும் அவரின் மீது இருந்த அதீத காதலுக்காகவும் ஷாஜகான் தாஜ்மஹாலை பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டினார். அதைப்போன்ற தற்பொழுது நடந்திருக்கிறது என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? உண்மை தான், தாஜ்மஹால் போல் ஒரு வீட்டைக் கட்டி அதைத் தன்னுடைய அன்பு பரிசாக வழங்கி இருக்கிறார் ஆனந்த். எனவே காதலை எந்த விதத்திலும் தடுத்து விட முடியாது. திருமணத்திற்கு பிறகும் ஒருவர் மீது ஒருவர் எந்த அளவிற்கு அன்புடன் இருக்கிறார்கள் என்பது தான் முக்கியம். அந்த வகையில் மும்பையை சேர்ந்த ஆனந்த் பிரகாஷ் என்பவர் தனது மனைவியின் மீதுள்ள அதீத காதலால், காதல் சின்னமான தாஜ்மஹால் போன்ற இன்னொன்றை கட்டி தந்துள்ளார்.


இந்த புது தாஜ்மஹாலை தனது மனைவிக்கு பரிசாக வழங்கியுள்ளார் ஆனந்த். இதை பற்றி கேட்டபோது இவர்களின் வாழ்க்கையில் நடந்த அழகிய காதல் கதையை பற்றி கூறினார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டு 27 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். தன் மனைவியின் மீதிருந்த காதலை வெளிப்படுத்த தாஜ் மஹாலை போன்ற போன்றை வடிவமைத்து அவருக்கு பரிசாக வழங்க வேண்டும் என்று ஆனந்த் நினைத்துள்ளார். அதை செய்தும் காட்டியுள்ளார். காதல் திருமணம் செய்து கொண்ட இவர்கள், 27 வருடங்கள் ஆன பிறகும் தங்கள் இருவருக்குள் இருக்கும் காதல் கொஞ்சம் கூட குறையவில்லை.


இப்போதும் நாங்கள் ஒருவருக்கும் ஒருவர் பலவற்றை கற்று தருவோம். என் மனைவி தான் என்னை பைக்கில் வைத்து அழைத்து செல்வார் என்று ஆனந்த் தெரிவித்துள்ளார். இவரின் இந்த புது தாஜ் மஹாலை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதை பகிர்ந்த 17 மணி நேரங்களில் சுமார் 5.4 லட்சம் பேர் இதை பார்த்துள்ளனர். இன்னொரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

Input & Image courtesy: ABPnews







Tags:    

Similar News