அம்பேத்கரை பட்டியலினத் தலைவராக சித்தரிக்கும் காங்கிரஸ்: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு!

நேற்று அம்பேத்கர் பிறந்தநாளில் ஓட்டு அரசியலுக்காக அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்தும் வேலையை காங்கிரஸ் செய்ததாக மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு.

Update: 2022-04-15 13:48 GMT

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் அம்பேத்கரின் 131-வது பிறந்தநாள் இந்தியா முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு கட்சித் தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார்கள். இந்த நிலையில் மத்திய சமூகநீதித்துறை அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள் இதுபற்றி கூறுகையில், "காங்கிரஸ், ஓட்டு அரசியலுக்காக அம்பேத்கரை ஒரு பட்டியலினத் தலைவராக சித்தரித்து, அவரின் பெயரைப் பயன்படுத்தியது" என்று கடுமையாக எதிர்த்து உள்ளார். 


அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, செய்தியாளர்களிடம் பேசிய வீரேந்திர குமார், "ஓட்டு அரசியலுக்காக, அம்பேத்கரின் பெயரை பயன்படுத்தும் வேலையை காங்கிரஸ் செய்தது. அம்பேத்கருக்கு மரியாதை அளிக்கும் வகையில் எந்தவித நடவடிக்கையையும் காங்கிரஸ் எடுக்கவில்லை. மத்திய சமூகநீதி அமைச்சர் வீரேந்திர குமார் அவர்கள் இதுபற்றி கூறுகையில் அம்பேத்கரை பட்டியலின தலைவராக சித்தரித்த வெறும் ஓட்டு அரசியலுக்காக காங்கிரஸ் இத்தகைய வேலைகளை செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 


அம்பேத்கரின் மறைவுக்குப் பின்னர் இருந்த அப்போதைய அரசுகள், அவருக்கு நினைவிடங்களை எழுப்புவதற்கான எந்த முயற்சியையும் செய்யவில்லை. ஆனால் 2014-ல் மோடி பிரதமரான பிறகு அம்பேத்கருக்கு பஞ்ச தீர்த்தங்கள் கட்டப்பட்டன. பா.ஜ.க ஆதரவு அரசு ஆட்சி செய்யும்போது தான் அம்பேத்கருக்குப் பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டது. தற்போது அம்பேத்கரின் கனவை நனவாக்கும் பணியை மோடி தலைமையிலான அரசு செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். 

Input & Image courtesy: Vikatan News

Tags:    

Similar News