'அடுத்த 30 ஆண்டுக்கு பா.ஜ.க ஆட்சி தான்' - அண்ணாமலை கூறும் சுவாரஸ்ய பின்னணி

Update: 2022-05-03 04:03 GMT

இலங்கையில் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை நிலவும் நிலையில், 4 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அங்கு மலையக தமிழர்கள் முன்னிலையில் உரையாற்றினார். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தொழிலாளர் காங்கிரஸ் தொழிலாளர்களின் நலனை மையமாக வைத்து செயல்படுவது போல, இந்தியாவில் பாஜக ஏழை மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனை மையமாக வைத்து செயல்படுகிறது. 

1947ல் பார்த்த இந்தியா வேறு, 2022ல் பார்க்கும் இந்தியா வேறு. அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்தியாவில் பாஜக ஆட்சி தான். அதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுவிட்டது. 

இலங்கை நிலவும் பொருளாதார நெருக்கடியை ஏதோ ஒரு நாட்டில் நிலவும் நெருக்கடியாக இந்தியா பார்க்கவில்லை, தொப்புள்கொடி உறவுகளாகத்தான் பார்க்கிறது. எப்போதும் இலங்கைக்கு பக்கபலமாக பாஜக விளங்கும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

30 ஆண்டுக்கு பாஜக ஆட்சி தான் என்பது குறித்து, அண்ணாமலை பேசிய முழு வீடியோ அடுத்து பார்க்கலாம். 


Full View


Similar News