பள்ளி மாணவி, நண்பர்களின் மனைவி, சமையல் வேலை செய்யும் ஆயா. ஒருவரைக்கூட விட்டு வைக்காத பாதிரியார்! அரியலூரில் அட்டகாசம்!
ariyalur church pastor illegal relationship
அரியலூர் துய லூர்து அன்னை ஆலயம் சுமார் 2 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. இந்த ஆலயத்தின் கட்டுப்பாட்டில் துய மேரி துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், நார்மலா காந்தி உயர்நிலை பள்ளி ஆகியன என்னன. இந்த ஆலயத்தில் பல பாதிரியார்கள் நீதிமான்களாக பரிசுத்தத்துடன் பணியாற்றி உள்ளனர். இந்த தூய லூர்து அன்னை ஆலய புதிய கட்டுமானப்பணிக்கு குடந்தை மறைமாவட்டத்தில் இருந்து 11 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி உதவி செய்யப்பட்டது. ஆனால் இங்குள்ள கிறிஸ்தவ வணிகர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் கிறிஸ்துவ மக்கள் ஒன்று கூடி மூன்றரை கோடியில் ஆலயத்தை கட்டி முடித்தனர்.
"வந்ததடா ஆபத்து" என்று இங்கு வந்தவர்தான் போமின் சாவியோ பாதரியார். பலதரப்பட்ட சமுக கிறிஸ்தவ மக்கள் இணைந்து செயல்பட்டு வந்த இந்த திருச்சபையை, பாதிரியார் டோமினிக் சாவியோ அவரது தன்னிச்சையான எதேச்சதிகார போக்கினாலும் தனது தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை முன்னிறுத்தி பிற சமூக கிறிஸ்தவ மக்களை ஒதுக்குவதாக புகார் வந்துள்ளது.
அதன்படி, இந்த டோமினிக் சாவியோ ஆரம்பத்தில் பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில் உள்ள பள்ளியில் பாதிரியாராக பணிபுரிந்துள்ளார். அப்போது 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவரை இவர் பாலியல் சீண்டல் செய்தபோது, அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்த மாணவன் ஒருவன் இதை நேரில் பார்த்துள்ளான். சில நாட்களில் அந்த மாணவன் மர்மமான முறையில் தூக்கில் தொங்கினான். குடந்தை மறைமாவட்ட அளவில் பஞ்சாயத்து பேசி பிரச்னை சரிசெய்யப்பட்டது.
அதன் பிறகு, தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டை, வடகரை ஆகிய ஊர்களில் பணியாற்றினார். பின் அரியலூர் மாவட்டம் கீழமைக்கேல்பட்டியில் பாதிரியாராக இருந்தபோது அயல்நாட்டில் பணிபுரியும் ஒருவரின் மனைவியுடன் கள்ளத்தெடர்பு கொண்டதில் அவர் கருவுற்றார். இதனை அறிந்த பொதுமக்கள் பாதிரியார் டோமினிக் சாவியோவை அடித்து விரட்ட அங்கிருந்து இரவோடு இரவாக கொள்ளிடம் ஆற்றில் நடந்தே தனது சொந்த ஊரான திருவையாற்றுக்கு வந்து சேர்ந்துள்ளார்.