சிந்தனைமிக்க வீடியோவை பகிர்ந்த இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் !

இந்தியாவின் முன்னணி தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா சிந்தனைமிக்க வீடியோவை பகிர்ந்து உள்ளார்.

Update: 2021-08-21 13:50 GMT

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திராவின் டிவிட்டர் பக்கத்தில் வித்தியாசமான, சுவாரஸ்யமான புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பகிர்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவர் டிவிட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். தனக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டதென்றால், தவறாமல் அதனை போஸ்ட் செய்துவிடுவார். மற்றவர்கள் யாரேனும் பகிர்ந்து, அந்த தகவல் தனக்கு தேவைப்பட்டால் அவர்களுக்கு மெசேஜ் செய்து கேட்டுத் தெரிந்து கொள்வார். வலைதளங்களில் இவர் போஸ்ட் செய்யும் அனைத்து பதிவுகள் மற்றவர்களை ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.  



 தற்போது அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு வித்தியாசமான வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "இந்த வீடியோ எவ்வளவு பழையது? அது எங்கிருந்து வந்தது? அல்லது இது யார்? என்று தெரியவில்லை. ஆனால் இது மிகவும் அருமையான, சிந்தனைமிக்க புதுமை போல் தெரிகிறது. உண்மையிலேயே மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை துரிதப்படுத்தும் ஒரு வழி. அதற்கு ஆதரவு தேவை. நான் உதவ மகிழ்ச்சியாக இருப்பேன்" அதில் அவர் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக அந்த வீடியோவில் மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் ஒருவருடைய உதவி இல்லாமல் பிற இடங்களுக்குச் செல்வது கடினமாக இருக்கிறது. அதனால் அதற்கு ஏற்ற வகையில் ஒரு வாகனத்தை ஒருவர் இயக்குகிறார். குறிப்பாக அந்த வாகனம், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவியாக, பிற இடங்களுக்குச் சென்றுவர வாகனமாகும் பயன்படுவதும் போன்ற வீடியோ காட்சிகள் அமைந்துள்ளன. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது. 

Input: https://twitter.com/anandmahindra/status/1428918466912923652?ref_src=twsrc%5Etfw

Image courtesy:Twitter posted picture. 


Tags:    

Similar News