மற்ற மதங்கள் எல்லாம் பாவங்களின் புகலிடம் - மோகன் சி லாசரஸின் வரம்பு மீறிய பேச்சு

பெருவிழா பிரார்த்தனை கூட்டத்தில் பேசுகின்ற மோகன் சி லாசரஸ் மதமாற்ற முயற்சி பேச்சு காரணமாக நியூஸ் தமிழ் செய்தி.

Update: 2022-10-12 02:04 GMT

அண்மையில் நடைபெற்ற அற்புத பெருவிழா பிரார்த்தனை கூட்டத்தில் பேசுகின்ற மோகன் சி லாசரஸ் மதமாற்ற முயற்சி பேச்சு காரணமாக நியூஸ் தமிழ் செய்தியை வெளியிட்டு இருந்தது. இது குறித்து ஏற்கனவே நியூஸ் தமிழ் அவர் அந்த கூட்டத்தில் பேசியது குறித்தான செய்தியை வெளியிட்டு இருந்தத குறிப்பாக அவர் பேசுகையில் மற்ற மதங்கள் எல்லாம் பாவங்களின் புகலிடம். எனவே பாவங்களில் இருக்கும் மக்கள் தங்களுடைய மதத்தை ஏற்றுக் கொண்டால் மேலும் பாவங்களுக்கு ஆளாகிர்கள். கிறிஸ்தவ மதத்திற்கு மாறி உங்களை புனிதம் ஆக்கிக் கொள்ளுங்கள் என்பது போன்று கூறி இருக்கிறார்.


எவ்வளவு அதிகமாக நீங்கள் காணிக்கை செலுத்துகிறீர்களோ? அதன்படி இயேசுவிடம் இருந்து நீங்கள் ஆசிர்வாதத்தை பெறுவீர்கள் என்றும் கூறுகிறார். நீங்கள் ஆயிரம் ரூபாய் செலுத்தி காணிக்கையாக செலுத்தினால் அதற்கு ஏற்ற பலனை பெறுவீர்கள். மேலும் அதிகமாக செலுத்திய நாள் அதிகமான பலனை பெற்றுக் கொண்டே இருப்பீர்கள் என்று போன்று கூறி மறைமுகமாக மதமாற்றும் முயற்சியில் இவர் ஈடுபட்டு இருக்கும் இந்த ஒரு செய்தியை தான் நியூஸ் தமிழ் வெளியிட்டு இருந்தது.



இந்த ஒரு செய்தி வெளியிட்டதற்கு மோகன் சி லாரன்ஸ் இன் உதவியாளர் ஜோக்கப் என்பவர் மூலமாக தற்போது மிரட்டல் ஒன்று வந்திருக்கிறது. போன் கால் மூலமாக அவர் அந்த நபரை மிரட்டி இருக்கிறார் யார் இந்த செய்தியை வெளியிட்டார்களோ? அவர்களுக்கு அடுத்த ஆறு மாத காலத்திற்குள் ஏதாவது நடக்கும் என்று சாபம் விட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Twitter source

Tags:    

Similar News