பள்ளியை பற்றியே தெரியாமல், உளறிக்கொட்டிய உயர்கல்வித்துறை அமைச்சர் - மீடியாக்களிடம் ஒரு எதிர் கேள்வி கூட வரலையை!

Update: 2022-07-18 01:20 GMT

மத்திய அரசு நடத்தும் பள்ளிகள் குறித்து எந்தவித புரிதல்களும் இல்லாமல் வழக்கம் போல உளறிக் கொட்டி இருக்கிறார் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.

கேந்திர வித்தியாலயா, நவோதயா மற்றும் சைனிக் பள்ளிகளில் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள். இந்த, பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள். தமிழ் படிக்க வேண்டும் என்ற விதியை, மத்திய அமைச்சர் எல். முருகன் ஏற்படுத்தி, கொடுக்க வேண்டும். என, நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என பத்திரிகையாளர் சந்திப்பில் அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருக்கிறார்.

இதில், கொடுமை என்னவென்றால், மேற்கூறிய பள்ளிகளில் 6-ம் வகுப்பில் இருந்து தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது கூட தெரியாமல் அமைச்சர் பொன்முடி வழக்கம் போல உளறிக் கொட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News